சேலம், அக்.22- பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி கண்களை கட்டிக்கொண்டு பள்ளி மாணவ, மாணவிகள் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டனர். உலக. சாதனை நிகழ்வு, பெண்கள், குழந்தைகள் பாது காப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேலம் மாநகர காவல் துறை மற்றும் துரோனா மூன் றாம் கண் அமைப்பு சார்பில் பள்ளி மாணவ மாணவிகள் பங் கேற்ற கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டும் பேரணி நடைபெற்றது. இப்பேரணியை சேலம் மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையர் உதயகுமார் துவக்கி வைத்தார். சேலம் அரசு கலைக்கல்லூரியில் இருந்து துவங்கிய பேரணி, அஸ்தம்பட்டி வழியாக ஏற்காடு அடிவாரம் சென்று மீண்டும் ஐந்து ரோடு வழியாக காந்தி விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.