districts

img

பாஜகவிற்கு தண்டனையாக அவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் அறைகூவல்

சேலம், ஏப்.7- தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வரும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜ கவினருக்கு தண்டனையாக அவர் களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்  என வாக்காளர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அறைகூவல் விடுத்துள் ளார். இந்தியா கூட்டணி சார்பில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.எம்.செல்வ கணபதியை ஆதரித்து, ஓமலூர்  அண்ணா சிலை அருகில் திமுக  இளைஞரணி செயலாளரும், அமைச் சருமான உதயநிதி ஸ்டாலின் திறந்த வெளி வாகனத்தில் பரப்புரையில் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பிரதமர் மோடி தமிழ் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து வேட்டு  வைத்துகொண்டே இருக்கிறார். தமிழ்நாட்டு மக்களைப் பற்றி பிரதமர் மோடிக்கு எந்த கவலையும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் அவர் எத் தனை முறை தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். கொரோனா காலங்க ளில் மக்களுக்கு எந்தவித இழப்பீடும் பிரதமர் மோடி கொடுக்கவில்லை. 500 ரூபாய் நோட்டுக்களை செல் லாது என்று அறிவித்துவிட்டு, கருப்பு பணத்தை ஒழிப்பதாக தெரிவித்தார். கருப்பு பணத்தை மீட்டு அனைவ ரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம்  செலுத்துவதாக கூறினார். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. எனவே, அவர்களுக்கு தண்டனை யாக, பாஜக ஆட்சியை வீழ்த்தி வீட் டிற்கு அனுப்ப வேண்டும். அதற்கான களம் தான் வருகின்ற நாடாளுமன் றத் தேர்தல். தேர்தலுக்காக மட்டும் மக்களை சந்திக்கின்ற கட்சி திமுக அல்ல; பல முறை சேலத்திற்கு வருகை தந்து  மக்களை சந்தித்துள்ளேன். இந்தியா  கூட்டணி வெற்றி பெற்றால் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகள் அகற்றப்படும். தமிழ்நாட் டில் கட்டணமில்லா பேருந்து பயண சேவையை 465 கோடி பேர் மேற் கொண்டுள்ளனர். இதுதான் இந்த திட்டத்தின் வெற்றி, என்றார். அப் போது, சிறுபான்மை மக்கள் வழிபாடு நடத்துவதால் சிறிது நேரம் பேசாமல் உதயநிதி ஸ்டாலின் அமைதியுடன் இருந்தார். இதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் மற்றும் எந்த சாதியாக இருந்தாலும், அனைவரும் சமம் என்று கூறுவது தான் திராவிட மாடல்  அரசு. இவ்வாறு உதயநிதி பேசி னார்.