districts

img

பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும்: ஆ.ராசா எம்பி.,பேச்சு

மே.பாளையம், ஜன. 31- மீண்டும் மோடி வெற்றி பெற்றால் அரசியல் சாசனம் இருக்காது உச்ச நீதிமன்றம் இருக்காது நாடாளுமன்ற சட்டமன்றங்களுக்கு வேலை இருக் காது, எனவே, ஜனநாயகம் பாது காக்கப்பட வேண்டுமானால், பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் துவக்கிவைத்து ஆ.ராசா எம்.பி உரையாற்றினார்.  கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் வட்டம், பெள்ளேபாளையம் ஊராட்சியில் ரூபாய் 80 லட்சத்து 85  ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகள் துவக்க விழா சிறுமுகை பகுதியில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற நீலகிரி நாடாளுமன்ற உறுப் ்பினர் ஆ.ராசா பேசியதாவது, “தமிழ கத்தில் ஏற்பட்ட கடுமையான மழை  பாதிப்புகளுக்கு ஒன்றிய அரசிடம் ரூபாய் 22 ஆயிரம் கோடி கேட்டோம்.  ஆனால், ஒன்றிய அரசு வழங்கியது வெறும் 500 கோடி ரூபாய், பாதிக் கப்பட்ட மக்களுக்கு மாநில ஆரசு மீது  வெறுப்பு ஏற்பட வேண்டும் என திட்ட மிட்டு செயல்படுகிறது மத்திய அரசு.வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும்  மோடி வெற்றி பெற்றால் இந்திய அரசி யல் சாசனம் இருக்காது, மதசார் பின்மை இருக்காது, உச்ச நீதிமன்றம்  இருக்காது, நாடாளுமன்ற சட்டமன் றங்களுக்கு வேலை இருக்காது, நடு நிலையான பத்திரிக்கைகளை மாற்றி  அனைத்து துறைகளிலும் மதவா தத்தை புகுத்தி அதிபர் ஆட்சி முறையே  நடைபெறும் என்ற சூழல் உருவாக்கப் படும்  என்பதை நினைவில் வைத்து மதவெறியை தூண்டி ஆதாயமடைய நினைக்கும் பா.ஜ.கவை தோற்க டிக்க வேண்டும்” என்றார்.