ஈரோடு, மார்ச் 14- நிதி ஒதுக்காத ஒன்றிய அரசு குறித்தும், அதன் பாதிப்புகளையும் மக்களிடம் சொல்லாமல் யாரிடம் சொல்வது? தனி அறையில் அமர்ந்து பேசுவதா? என பாஜக எம்எல்ஏவின் புலம்பலுக்கு அமைச்சர் சு.முத்து சாமி பதிலடி கொடுத்துள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டா லின் தலைமையிலான இரண்டரை ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி, ஈரோடு மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் நடை பெற்றது. செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், வீட்டு வசதி மற்றும் நகர வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச் சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத் தார். அப்போது செய்தியாளர்களி டம் பேசிய அமைச்சர், பொதுமக்க ளுக்கு, போய் சேரும் வகையில் முதலமைச்சர் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து கொண்டி ருக்கிறார். தாளவாடியில் நகரப் பேருந்துகள் இல்லாததால், புறந கர் பேருந்துகளில் பயணிக்கும் மகளிருக்கு இலவச பயணம் விரைவில் மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்படும். சோலார் பகுதியில் காய்கறி மார்க்கெட் அமைக்க, 20 ஏக்கர் நிலமும், ரூ.20 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்ந்தபட்ச வசதிகளுடன் கூடிய மார்க்கெட் அமைக்கப்படும். நகர்ப் புறத்தில் சில்லரை விற்பனை கடை கள் எத்தனை இடங்களில் அமைக்க முடியுமோ, அத்தனையும் அமைக் கப்படும், என்றார். முன்னதாக, பொள்ளாச்சியில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல் வர் ஒன்றிய அரசின் பாரபட்சம் குறித்தும், எந்த திட்டங்களையும் கொண்டு வராமல் பிரதமர் மோடி பொய்யாய் பேசிவருவதால் மோடி புளுகு என முதல்வர் மு.க.ஸ்டா லின் காட்டமாக விமர்சித்திருந் தார். இவ்விழா நடைபெற்ற அதே நாளில், கோவை அரசு மருத்துவ கல்லூரியில் புதிய கட்டடங்களை முதல்வர் கானொலி காட்சியின் வாயிலாக திறந்து வைத்தார். அவ் விழாவில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் பங்கேற்று இருந்தார். முதல்வரின் பேச்சில் அப்செட் ஆகிப் போனார் வானதி சீனிவாசன். இத னைத்தொடர்ந்து செய்தியாளர்க ளிடம் புலம்பித்தள்ளியிருந்தார். இந்நிலையில், ஈரோட்டில் நடை பெற்ற விழாவில் அமைச்சர் முத்து சாமியிடம் வானதி சீனிவாசனின் புலம்பல் குறித்த நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, அரசாங்க விழாவில் அரசாங்கத்திற்கு ஏற்ப டும் பாதிப்புகளை முதலமைச்சர் சொல்கிறார். 47 ஆண்டுகளுக்கு முன்பு வந்ததைப் போல புயல் மழை வெள்ளம் சென்னை உள் ளிட்ட மாவட்டங்களில் வந்தது. அதற்கு ஒன்றிய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியது? இதை வேறு எங்கே போய் கேட்பது. தூத்துக்குடி யில் 150 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது போன்ற வெள்ளம் இப் போது வந்தது, அம்மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசாங்கம் தான் நிவா ரணம் அளித்தது. ஒன்றிய அரசு ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. இதனை அரசு நிகழ்ச்சியில், பொது மக்களிடம் சொல்லக்கூடாது என் றால், எங்கே போய் சொல்வது? வீட் டில் அறையில் தனியாக சொல்லிக் கொண்டிருப்பதா? என கிண்ட லாக பதிலளித்தார்.