கோயம்புத்தூர், ஏப். 12 – விதிமீறல் குறித்து காவல்துறையில் முறையிட்ட திமுகவினர் மீது தாக்குதல்; ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய பெண் மீது தாக்குதல் என கோவை மற்றும் திருப்பூ ரில் பாஜகவினர் ரவுடித்தனத்தில் இறங்கியுள்ளனர்.
அண்ணாமலையின் தேர்தல் பரப்பு ரையில் வெளியூர் ரவுடிகள் அதிக அளவு திரண்டுள்ளதாகவும், திட்டமிட்டே கல வரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படுவதாகவும் அரசியல் கட்சியி னர் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டு கின்றனர்.
கோவை ஆவாரம்பாளையத்தில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, வியா ழனன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10-45 மணி வரை அவர் பிரச்சாரம் செய்துள் ளார். இதைப்பார்த்த திமுக மற்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், காவல் துறையினரிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
இதனை கண்ட அண்ணாமலை யுடன் வந்த பாஜக குண்டர்கள், திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் மீது கடும் தாக்குதலை நடத்தியுள்ள னர். காவல்துறையினரிடம் முறையிட்டு இயல்பாக பேசிக்கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜக ரவுடிகள் நடத்திய இந்த திடீர் தாக்குதல் அங்குள்ள பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பீளமேடு நகரக்குழு உறுப்பி னர் ஜோதிபாசு மற்றும் திமுகவை சேர்ந்த மோகன்ராஜி, குணசேகரன், செல்லப்பா, சேகர், சதீஷ் மற்றும் ரங்கநாதன் ஆகி யோர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனிடையே தகவல் அறிந்து அப்பகுதியில் திமுக கூட்டணி கட்சியினர் திரண்ட நிலையில், பாஜகவி னர் அங்கிருந்து ஓட்டம் எடுத்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு, திமுக மாவட்டச் செயலாளர் நா. கார்த்திக் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள னர். கோவையில் தேர்தல் அலுவலர்கள், காவல்துறையினர் பாஜகவுக்கு சாதக மாக நடந்துகொள்வதாக ஏற்கெனவே குற்றச்சாட்டு உள்ள நிலையில், தற்போது 294பி, 323, 147 என மூன்று பிரிவின் கீழ் பாஜக வினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்த னர். மேலும், தேர்தல் விதிகளை மீறியதாக அண்ணாமலை மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஜிஎஸ்டி குறித்து பதிலளிக்க முடியாமல் பெண் மீது பாஜகவினர் தாக்குதல்
திருப்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட் பாளருக்கு ஆதர வாக பாஜகவினர் சிலர் வியாழக்கிழமை ஆத்துப்பாளையம் பகுதியில் வாக்கு சேக ரிப்பில் ஈடுபட்டிருந்த னர்.
அப்போது அதேபகுதியில் கடை வைத்து நடத்தி வரும் சங்கீதா என்பவர், “பெண்கள் உரிமை பற்றி பேசுறீங்க.. ஆனா, நாப்கினுக்கு ஜிஎஸ்டி வரி போட் டுள்ளீர்களே நியாயமா?” என இயல்பாக கேள்வி கேட்டுள்ளார். இதனை கண்டு அங்கிருந்த பொதுமக்களும் சிலிண்டர் விலை ஏறிப்போச்சு, அரிசி விலை ஏறிப் போச்சு என அடுத்தடுத்து பாஜகவினரை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பாஜக வினர் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சங்கீதாவின் கடைக்குள் புகுந்து, ‘நீ யார் எங்களிடம் கேள்வி கேட்க?’ எனக்கூறி அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசி, பின்னர் திடீ ரென தாக்குதல் நடத்தியுள்ளனர். அதிர்ச்சி யடைந்த அப்பகுதியில் உள்ள மக்கள், பாஜக குண்டர்களிடமிருந்து சங்கீதாவை மீட்டுள்ளனர்.
சங்கீதா தற்போது வேலம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள் ளார். ஏற்கெனவே பல்லடம் அருகில் கைத்தறி குறித்து கேள்வி எழுப்பிய முதியவரை பாஜகவினர் தாக்கினர். திருப்பூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி யிடும் பாஜக வேட்பாளர் முருகானந்தம், காவலர்களையே மிரட்டினார். இவ்வாறு பாஜகவினர் அடுத்தடுத்து ரவுடித்தனத்தில் ஈடுபட்டு வருவது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.