தருமபுரி, ஏப்.5- மக்களின் நலனுக்கான போராட் டத்தில் பங்கேற்று, பாஜக தலைவர் கள் சிறைக்கு சென்ற வரலாறு இல்லை என அமைச்சர் துரைமுரு கன் தெரிவித்துள்ளார். தருமபுரி நாடாளுமன்ற தொகு தியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து, இண்டூரில் பிரச்சார பொதுக்கூட்டம் நடை பெற்றது. கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் பெ.சுப்பிர மணி தலைமை வகித்தார். இக்கூட் டத்தில், திமுக பொதுச்செயலாள ரும், அமைச்சருமான துரைமுரு கன் பங்கேற்று பேசுகையில், தேர் தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசுகின்ற பிரதமர் மோடி, திமு கவை துடைத்தெறிய வேண்டும் என்கிறார். அதேபோல், வேறொரு கூட்டத்தில் காங்கிரசும் துடைத்தெ றியப்பட வேண்டிய கட்சி என்கிறார். இவ்விரு கட்சிகளும் தியாகங்க ளால் வளர்ந்தவைகளாகும். இந் திய இறையாண்மையை பாதுகாப் பதில் திமுக என்றைக்கும் சமரசம் செய்து கொண்டதில்லை. அதற்கு முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் கடந்த கால செயல்பாடுகள் எடுத்துக்காட் டாக அமைந்துள்ளன. வங்கதேச போரின் போது திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு, அன் றைய பிரதமர் இந்திரா காந்திக்கு நிதியுதவி அளித்து துணை நின்ற வர் முன்னாள் முதல்வர் அண்ணா. இதுபோல ஏராளமான வரலாற்று நிகழ்வுகள் உள்ளன. அண்ணா, கலைஞர், தற்போ தைய முதல்வர் ஸ்டாலின் தொடங்கி இந்தக் கட்சித் தலைவர் கள் எல்லோருமே மக்கள் நலனுக் காக போராடியவர்கள். மக்கள் நலன் காக்கும் போராட்டத்திலே சிறையில் இருந்தவர்கள் தான் திமுக தலைவர்கள். ஆகவே, திமு கவை அவ்வளவு எளிதில் துடைத்து எறிந்துவிட முடியாது. இதேபோல, இந்த நாட்டின் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்திலே பிறந்து, லண்ட னிலே படித்து 16 ஆண்டுகள் சிறை யில் இருந்தவர் தான் முன்னாள் பிர தமர் நேரு. அவருடைய தியா கம் அளப்பரியது. இதேபோல, இந் திரா காந்தி பிரதமராக இருக்கும் போதே படுகொலை செய்யப்பட் டார். அவரது மகன் ராஜீவ் காந்தி யும் கொல்லப்பட்டார்.
இப்படி இந்த நாட்டுக்காக தொடர்ந்து பல தியா கங்களை செய்தது தான் நேருவின் குடும்பம். அவர்களுடைய தியா கத்தை போற்றி மக்கள் அவர்க ளுக்கு பதவி அளித்து வந்தனர். இத் தகைய எந்த வரலாறும் இல்லாத கட்சி தான் பாஜக. மக்கள் நலன் காக்கும் போராட் டத்திலே பிரதமர் மோடியோ அல் லது அக்கட்சியின் தலைவர்களோ சிறைக்கு சென்ற வரலாறு கிடை யாது. ஆகவே, திமுக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளை அவ்வ ளவு எளிதில் மக்களிடம் இருந்து பிரித்து விட முடியாது. தமிழகத் திலே இந்தியா கூட்டணியின் கட்சி கள் ஓரணியாகவும், ஓரணியாக இருந்த கட்சிகள் வெவ்வேறு கூட்டணியிலும் போட்டியிடுகின் றன. அதில் ஒரு கட்சி, எதற்காக கூட் டணி மாற்றி அமைக்கிறது என்பதே மக்களுக்கு புரியவில்லை. அந்தக் கட்சியும் தருமபுரியில் வேட்பா ளரை களமிறக்கியுள்ளது. இதனை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எதிர்வரும் தேர் தலிலே அவர்களுக்கு மக்கள் சரி யான முடிவை அளிப்பார்கள் என் றார். முன்னதாக, திமுக ஒன்றியச் செயலாளர் வைகுந்தம் வரவேற் றார். இதில் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சி.பழனியப்பன், தரு மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி. என்.வி.எஸ்.செந்தில்குமார், மாண வரணி மாவட்ட அமைப்பாளர் பெரி யண்ணன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் பி.தீர்த்தராமன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஏ.குமார், இந்திய கம் யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா ளர் சா.கலைச்செல்வன், பகுதிச் செயலாளர் ராஜா, விடுதலை சிறுத் தைகள் கட்சி மாவட்ட செயலா ளர்கள் சாக்கன் சர்மா (கிழக்கு), த. கு.பாண்டியன் (மையம்), கருப் பண்ணன் (மேற்கு) மற்றும் கூட் டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண் டனர்.
பள்ளிவாசல் முன்பு வாக்குசேகரிப்பு
தருமபுரி நகரம், டேகிஸ்பேட்டை, ரஹமத் மஜித் மற்றும் மொஹமத் அலி கிளப் சாலை ஆகிய பகுதிகளில் திமுக வேட்பாளர் ஆ.மணி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இதில் மாவட்டச் செயலாளர் பெ.சுப்பிரமணி, நகரச் செயலாளர் நாட்டான் மாது, பொருளாளர் தங்கமணி, துணைச்செயலாளர் ரேணுகாதேவி, சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் ரஹீம், நகர்மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன், ஜெகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.