districts

img

‘இந்தியா’ கூட்டணி மூலம் பாஜக நெருக்கடியை சந்தித்துள்ளது

சேலம், செப்.8- ‘இந்தியா’ கூட்டணி மூலம் பாஜக மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருவதாக காங்கிரஸ் தமிழ்நாடு கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்களுக்கு எதிரான துன்புறுத்தல், மோதல்கள், மணிப்பூர் கலவரம் உள் ளிட்ட விவகாரங்களை முடிமறைத் ததன் காரணமாக இந்தியாவை ‘இந் தியா’ என்று அழைப்பதற்கு பயந்து ‘பாரத்’ என்ற பெயரை மாற்ற முயற்சி செய்து வருகின்றனர். எனவே இந் தியாவையும், ஜனநாயகத்தையும் காப்போம். பாஜக என்ன விலை கொடுத்தாலும் மாபெரும் வெற்றி பெற்று ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமையும். மக்கள் இந்தியா கூட் டணி பக்கம் உள்ளனர். மக்களுக் கான இந்தியா கூட்டணி, பாஜகவின் முகத்திரையை கிழித்து, 2024 ஆம் ஆண்டு ஆட்சிக்கட்டிலில் அமரும். இந்தியாவில் அனைத்து வகையான கலாச்சாரங்களும், பெருமையும், பன் முகத்தன்மையும் உள்ளது. இந்தியா வில் அனைத்து மக்களும் சமம் என் பதை இந்தியா கூட்டணி உரு வாக்கும்.  “ஒரே நாடு, ஒரே தேர் தல்” நடைமுறைக்கு ஒத்து வராது. இதுகுறித்து ஜனநாயகத்தில் எதிர்க் கட்சிகள், முதல்வர்கள் என அனைத்து தரப்பினர்களையும் அழைத்துப் பேசி யிருக்க வேண்டும். எந்த நிலைபாட்டை பாஜக எடுத்தாலும், அதிலிருந்து மக் களை நாங்கள் தவறாமல் காப்பாற்று வோம், என்றார். மேலும், சனாதனம் ஒழிப்பு குறித்து அமைச்சர் உதயநிதி பேசியது குறித்த கேள்விக்கு, மக்களுக்கான அரசி யலை ‘இந்தியா’ கூட்டணி தான் பேசு கிறது. பாஜக ஏதாவது காரணம் கூறி,  

இதிலிருந்து நழுவிக்கொள்ள பார்க் கிறார்கள். சனாதனத்தை பற்றி பேசு வது தவறில்லை. இந்தியாவில் உள்ள அனைவரும் தங்களது கருத்தைக் கூற உரிமை உள்ளது. கருத்து கூறுவ தற்கு தலையை வெட்ட வேண்டும் என்று கூறுவது சரியானது அல்ல. ஜனநாயகத்தில் பேச்சுரிமை, எழுத்து ரிமை உள்ளிட்ட அனைத்து உரிமை களும் உள்ளது. அந்த உரிமைகளை பயன்படுத்தி, கருத்தை நிலை நாட்ட வேண்டும். அந்தக் கருத்தை மக்கள்  ஏற்றுக்கொண்டால் வலிமைபெறும். அதேபோன்று இந்தியா கூட்டணி யின் கருத்து, மக்களை ஒருங்கி ணைப்பது; இந்தியாவை காப்பது என்பதுதான். ‘இந்தியா’ கூட்டணி மூலம் பாஜக மிகப்பெரிய நெருக் கடியை சந்தித்து வருகிறது. “இந்தியாவின் முக்கிய பிரச்ச னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசப்பட வேண்டும். விவாதத்திற்கு எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளோம். வேலைவாய்ப்பின்மை, சமூகநீதி மற் றும் சாதி வாரி கணக்கெடுப்பு, பணப் புழக்கமின்மை, பொருளாதாரம் சீர ழிவு குறித்து விவாதிக்கப்பட  வேண்டும்” என காங்கிரஸ் தலைவர்  சோனியா காந்தி பிரமரிடம் முன் வைத்துள்ளார். ஆனால், மறைமுக மாக நாட்டு மக்களுக்கும், எதிர்க் கட்சிக்கும் தெரியாமல் ஒரு ஆட்சி  நடைபெற்று வருகிறது. இதுபோன்ற மோசமான ஆட்சி சுதந்திர இந்தியா வில் பார்த்ததில்லை. மறைமுகமாக திட்டத்தை கொண்டு வர முயற்சிக் கின்றனர். அத்தகைய திட்டங்கள் அனைத்தும் முறியடிக்கப்படும். உரிமை நிலை நாட்டப்படும். இவ் வாறு கே.பி.தங்கபாலு தெரிவித் தார்.