districts

img

“விலைவாசியை உயர்த்தி, மக்களின் உழைப்பை பாஜக அரசு திருடி வருகிறது”

விலைவாசி உயருது, வேலை கிடைக் கல, வறுமை குறையல, பலர் வாழ்க்கை தெருவுல. நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் 10 ஆண்டு கால சாதனைகள் இதுதான் என் றால் மிகையல்ல. இதுகுறித்து மக்கள் கூறி யிருப்பதாவது,

பி.பாரதி

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவ தாகக் மோடி கூறினார். மாறாக வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. அரசு,  பொதுத்துறை நிறுவனங்க ளில் காலியாக பணியிடங்களை நிரப்ப ஆட் களை எடுப்பதில்லை. இதனால் படித்த இளை ஞர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். சமூக விரோத செயல்கள் அதிகரிக்கும் அபாயம் எழுகிறது. குற்றங்கள் அதிகரிப்பதுடன், இளைஞர்கள்  வாழ்க்கையும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எதிர்காலமே இளைஞர்களின் கையில் தான் உள்ளது. அக்னிபாத் திட்டத்தில் 4 ஆண்டு கால ஒப்பந்தத்தில் எடுக்கின்றனர். அதன் பின்னர் என்ன செய்வது?

தீபா

பெட்ரோல், டீசல் விலை உயர்வை சமாளிக்க முடிய வில்லை. இதனால் எல்லா பொருட்களின் விலையும் உயர்கிறது. 400 ரூபாய்க்கு விற்ற கேஸ், ரூ.1200க்கு விற் கிறது. அதற்கேற்ப வருமானம் கூடவில்லை. சிலிண்டருக்கு வார சம்பளமே சரியாகி விடு கிறது. காய்கறி, மளிகை உள்ளிட்ட உணவிற்கு தேவையான மற்ற செலவை எப்படி சமாளிப் பது? விலைவாசி உயர்விற்கு ஏற்ப வருமானம் உயரவில்லை. ஜிஎஸ்டி வரியினால் தொழில் செய்ய முடியவில்லை. போதும் இந்த ஆட்சி யின் பலன்கள்.

கண்மணி, ஆட்டோ ஓட்டுநர்

மோடி ஆட்சியில் சமையல் எரிவாயு விலை குறைத்தேன் என்கின்றனர். ஆனால், வாகனங் களுக்கு பங்கில் கேஸ் அடிக்க 5 ரூபாய் உயர்த்தியுள்ளனர். மக்க ளுக்கு சேவை செய்கிறேன் என்று சொல்லி வாகன ஓட்டிக ளுக்கு சுமையை ஏற்படுத்து கின்றனர். வரிகளை உயர்த்தி யுள்ளனர். ஆன்லைன் அபரா தம் என்ற பெயரில், ஓடாமல் நிற்கும் வண்டிக்கும் அபராதம் விதித்து வசூல்  செய்கின்றனர். புதிய மோட்டார் வாகன சட் டத்தை கைவிட வேண்டும். எல்லாவற்றிற்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கும் மோடி அரசு, பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் ஏன் கொண்டு  வரவில்லை? கார்ப்பரேட் முதலாளிகளுக்கு  சலுகை அளிக்கும் ஒன்றிய அரசு, ஆட்டோ  தொழிலாளிக்கு சமூக பாதுகாப்பு அளிக்க மறுக் கிறது. புதிய ஆட்டோ வாங்கும் தொழிலாளர்க ளுக்கு அரசு வங்கியில் மானியத்துடன் கடன் வழங்க வேண்டும். கேஸ் பங்கில் விலை ஏறும் போது உடனே நடைமுறைக்கு கொண்டு வரு கின்றனர். ஆனால், விலை இறங்கும்போது உடனடியாகக் குறைக்கப்படுவதில்லை.

கலாமணி

தேசிய ஊரக வேலை திட் டத்தில், வாரத்தில் 3, 4 நாள் களுக்குத்தான் வேலை கிடைக் கும். வாரத்திற்கு ரூ.900 தான்  வருமானம் கிடைக்கும். அதை வைச்சு என்ன பண்ணுறது? ஒரு சிப்பம் அரிசி ரூ1400, வெங்காயம் ஒரு கிலோ இப்பதான் 50 ரூபாய்க்கு வந்துள்ளது. முன்பு 100 ரூபாய்க்கு விற்றது. தக்காளி 150  ரூபாய்க்கு விற்றது. அதனால், 30 ரூபாய்க்கு தான் வாங்க முடிந்தது. கேஸ் விலை உயர்வி னால் ஒரு வேளைக்கு மேல் அதில் சமைக்க முடிவதில்லை. உங்கள் பணம் உங்கள் பையில் என்கின்றனர். அரசு மானியத்தை வங்கிக்க ணக்கில் போடுவோம், என்றனர். ஆனால், அப் படி ஒன்றும் வரவில்லை. எனவே மோடி அரசு வேண்டவே வேண்டாம்.

ம.ரமேஷ்

அனைத்து பொருட்களின் விலைகளும் உயர்ந்துவிட்டது. பெரிய பணக்காரர்களுக் குத் தான் மோடி சலுகை வழங்குகிறார். அடித் தட்டு மக்கள் ரொம்ப பாதிக்கப்படுகின்றனர். எரிபொருட்களின் விலை வேறு உயர்ந்து கொண்டே இருக்கிறது. வங்கிக்கடன் பெரிய ஆட்களுக்கு தள்ளுபடி செய்கின்றனர். சாதாரண மக் களுக்கு வங்கியில் குறைந்த பட்ச தொகை இல்லை என  அபராதம் வசூலிக்கின்றனர். இது என்னவொரு ஆட்சி என்றே தெரியவில்லை.

இஸாரத்தலி

மோடி அரசு முற்றிலும் அகற்றப்பட வேண்டிய அரசு. அத்தனை பேரையும் ஊழல் வாதிகள் என்றனர். இவர்கள்  செய்து கொண்டிருக்கும் ஊழலை எங்கே போய் சொல் வது? இந்த ஊழலை ஏற்றுக்கொள்ளவே முடி யாது. தேர்தல் வருகிறது என்பதற்காக எதை யெல்லாமே செய்து பார்க்கிறார்கள். ஆனால், மக்கள், அமைப்புகள், இந்தியாவே ஒன்று சேர்ந்து மோடியை எதிர்த்தாக வேண்டும். ஒரு ரூபாய்க்கு விற்கும் பொருளை மூன்று ரூபாய் உயர்த்திவிட்டு, 2 ரூபாய்க்கு விற்றாலும் லாபம் தான். அதுபோல கேஸ் விலை குறைப்பு உள் ளது. மணிப்பூரில் கலவரம், உத்தரபிரதேச ரத்தில் மாணவர்களை ஆசிரியர்கள் நடத்திய விசயமெல்லாம் கண்டிக்கத்தக்க செயல். மாநில அரசிற்கும், ஒன்றிய அரசிற்கும் ஆளு நர்கள் பாலமாக இருக்க வேண்டும். தமிழ் நாட்டில் எந்த சட்டம் போட்டாலும், ஆளுநரை வைத்துக் கொண்டு இவர்கள் (பாஜகவினர்) வெறுப்பு அரசியல் செய்கின்றனர். ஆகவே ஆளுநர்களையும், மோடி அரசையும் அப் புறப்படுத்தியாக வேண்டும்.

பி.லலிதா

பெட்ரோல், டீசல், சமை யல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இத னால் பெண்கள் மிகவும் பாதிக் கப்படுகின்றனர். வேலைக் கும் சென்று வந்து குடும்பத் தையும் நடத்த வேண்டிய நிலையில் பெண்கள் உள்ளனர். அதனால் அதிக சிரமங்களை பெண்களே சந்தித்து வரு கின்றனர். தேர்தல் வருவதால் ரூ.200 கேஸ்  விலையை குறைத்துள்ளது ஏமாற்றமளிப்ப தாகவே உள்ளது. தொடர்ந்து 4, 5 வருடமாக சிலிண்டர் மானியம் வங்கிக் கணக்கிற்கு வர வில்லை. ஜிஎஸ்டி வரியினால் ஏராளமான தொழில்கள் முடக்கத்தை சந்தித்து வருகிறது. வாங்கும் போது ஒரு வரி, கொடுக்கும்போது ஒரு  வரி கொடுத்து தொழில் செய்ய முடியவில்லை. கிராமப்புற மக்கள் குறிப்பாக பெண்கள் 100 நாள் வேலையை நம்பி உள்ளனர். அதற்கான நிதி வெட்டப்பட்டுள்ளது. சாதாரண ஏழை, எளிய மக்களை பாதிக்கும் வகையில் மோடி அரசின் நடவடிக்கை உள்ளது. விவசாய தொழி லாளர்களை மட்டுமின்றி, விவசாயிகளுக்கு  விரோதமாக சட்டங்களை நிறைவேற்றிய மோடி அரசு இனியும் நீடிக்கக்கூடாது.

சண்முகவள்ளி

இடதுசாரி கட்சிகள் ஆதர வுடன் ஆட்சி அமைந்த காலத் தில், 100 நாள் வேலை கிரா மப்புற மக்களுக்கு கிடைத் தது. பாரதிய ஜனதா கட்சி, ஆட்சிக்கு வந்த பிறகு இத்திட்டத்திற்கு நிதியை  குறைத்தது. தொடர்ந்து 100 நாள் வேலை வழங்காமல் சராசரியாக 12 நாட்கள் மட்டுமே  கிடைக்கிறது. சட்டக்கூலி ரூ.294 முழுமையாக கிடைப்பதில்லை. ஆன்லைன் மூலம் பதிவு செய்வதால் ஏராளமான குறைபாடுகள் தொடர் கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்வதால் இத்திட்டம் சட்டமாக இருந்தும், முடங்கும் அபா யம் உள்ளது. எனவே, வருகின்ற நாடளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசிற்கு கிராமப்புற மக்கள் உரிய பதிலை தங்களது வாக்கின் மூலம் நிச்சயம் அளிப் பார்கள்.

என்.ராமசாமி

மூத்த குடிமக்களுக்கு வழங்கி வந்த ரயில் பயணக் கட்டணம் சலுகையை மீண் டும் வழங்க வேண்டும் என்ற சிறு கோரிக்கையைக்கூட ஏற்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. தங்களது மகன், மகள் போன்றோர் வேலையின்மை, விலை வாசி உயர்வு போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், தாங்கள் பெறும் ஓய்வூதியத்திலிருந்து அவர்களையும் பாது காக்கவும், பராமரிக்கவும் வேண்டிய நிலையில் கணிசமான ஓய்வூதியர்கள் உள்ளனர். ஓய்வூ தியர்களைப் பொறுத்தவரை, புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது பிரதான கோரிக்கை. அதை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம், என்றார்.

ஆர்.விஜயராகவன்

கிராமப்புற வேலை திட்டத்திற்கு ரூ.2 லட் சத்து 72 ஆயிரம் ஒதுக்க வேண்டிய ஒன்றிய அரசு, வெறும் ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே  ஒதுக்கியுள்ளது. ஆனால், பெரும் முதலாளிக ளுக்கு ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் கோடி வங்கிக் கடனை தள்ளுபடி செய்கிறது மோடி அரசு. மேலும், அவர்களுக்கு 35 ஆயிரம் கோடி  வரியைத் தள்ளுபடி செய்கிறது. ரேசன்  பொருட்களுக்கான நிதியைக் குறைத்துவிட் டது. “காவலனே பிக்பாக்கெட் அடிப்பது போல” விலைவாசியை உயர்த்தி ஏழை, நடுத்தர மக்க ளின் உழைப்பை மோடி அரசு களவாடி வரு கிறது. சாதனைகளைச் சொல்ல வக்கில்லா தவர்கள், பக்தி உணர்வுகளை வெறியாக மாற்றி, மனிதர்களை காட்டுமிராண்டிகளாக்கி கலவரம் செய்கின்றனர். அதன் மூலம் அதிகா ரத்தை மீண்டும் கைப்பற்ற துடிக்கின்றனர். அவர்களின் சதிச் செயல்களை முறிய டிப்போம். மக்களையும், தேசத்தையும் காப் போம்.

மல்லிகா 

மோடியின் ஆட்சியில் பெண்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், சமூக ரீதியாகவும் எந்த பாதுகாப்பும் இல்லை. உதா ரணம் மணிப்பூர். அதுமட்டுமின்றி இந்த ஆட்சி யில் உயர்ந்துள்ள விலைவாசியினாலும் அதி கம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். வீட்டு  வாடகையைகூட கட்ட முடியவில்லை.எனவே, பெண்களை பாதுகாக்காத இந்த மோடி தலை மையிலான அரசு நாட்டிற்குத் தேவை யில்லை. தூக்கி எறியப்பட வேண்டும்.

-சக்திவேல், ஈரோடு