ஓட்டம் எடுத்த அண்ணாமலை...
கடலூரில் செய்தியாளர்களை குரங்கு என்று விமர்சித்த அண்ணாமலை மீது கடும் கோபத்தில் உள்ள ஊடகவியலாளர் கள், கோவையில் செய்தியாளர் சந்திப்பில், இதனை வெளிப்படுத் தினர். மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அண்ணாமலையிடம் வலியு றுத்தினர். ஆனால், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்கிற கதையாக, நான் குரங்கு என்று சொல்லவில்லை, குரங்கு மாதிரி என்றே சொன்னேன் என்று புது விளக்கம் கொடுத் தார். இரண்டும் ஒன்றுதானே என்று ஊடகவியலாளர்கள் கேட்க, அது வேறு இது வேறு என புது விளக்கம் கொடுத்தும், கேள்வியை திசை திருப்பியும் பார்த்தார். விடாமல் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்க ஒரு கட்டத்தில் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். நீங்கள் வேண்டும் என்றால் என்னை புறக்கணியுங்கள் என்று ஓட்டம் எடுத்தார்.
கோவை, அக்.31- பாஜகவின் கோஷ்டி சண்டை உச்சத்திற்கு சென்றுள்ளது. அண் ணாமலையின் கோவை வரு கையை உள்ளூர் பாஜகவினர் புறக்கணித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தை பாஜக வினர் எப்படியாவது தங்களது அர சியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த போட்டி போட்டு அரசியல் செய்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்த லில் கோவை தொகுதியில் போட்டி யிட பாஜகவின் அண்ணாமலை, சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் போட்டியிட முனைப்பு காட்டி வருவதாக தெரி கிறது. இதன்வெளிப்பாடாகத்தான் 31 ஆம் தேதி கோவை மாநகரில் பந்த் என தலைமையை கேட்காமல் சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனி வாசன் தன்னிச்சையாக அறிவித்த னர். ஆனால், கோவை மக்களிடம் இந்த பந்த்திற்கு ஆதரவில்லை என் பதை உணர்ந்தும், தனது நாற்காலி ஆசைக்கு குறுக்கே இவர்கள் வரு வதா? என நினைத்து பாஜகவின் மாநில தலைமை இந்த பந்த்தை அறிவிக்கவில்லை. சி.பி.ராதா கிருஷ்ணன்தான் அறிவித்தார்.
எங்களுக்கும் அந்த பந்த்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நீதிமன்றத்தில் பல்டி அடித்தார் அண்ணாமலை. இதனை சற்றும் எதிர்பார்க்காத சிபிஆர், வானதி கோஷ்டியினர் கதிகலங்கிப்போயினர். இவர்க ளின் கோஷ்டி சண்டை நீறு பூத்த நெருப்பாக இருந்த நிலையில், அண்ணாமலையின் கோவை வரு கையை புறக்கணித்து கோஷ்டி மோதலை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். திங்களன்று பாஜக தலைவர் அண்ணாமலை கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு தரிசனம் செய்யப்போவதாக தெரிவித்து வந் தார். ஆனால், இந்நிகழ்ச்சிக்கு அந்த கட்சியின் மூத்த நிர்வாகி களான சி.பி.ராதா கிருஷ்ணன், தொகுதி எம்எல்ஏ வானதி உள் ளிட்ட உள்ளூர் பாஜகவினர் பங் கேற்காமல் புறக்கணித்தனர். இது கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட கனவில் இருக்கும் அண்ணாமலைக்கு மேலும் எரிச்சலையூட்டியுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே தேர்தல் ‘சீட்’ விவகாரத்தில் பாஜக நிர்வாகிகள் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்ற னர். அண்ணாமலை குறுக்கே வருவதை உள்ளூர் பாஜகவினர் ஏற்கவில்லை என தெரிகிறது. இத னால்தான் வானதி சீனிவாசனும், சி.பி.ராதாகிருஷ்ணனும் கோவைக்கு வந்த அண்ணாமலையை வரவேற் கவோ அல்லது அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கெடுக் கவோ இல்லை என்று பாஜக வட் டாரங்கள் தெரிவிக்கிறது.