districts

img

செய்தியாளர் மீது பாஜகவினர் தாக்குதல்

நாமக்கல், ஜூன் 9–  ஊடகவியலாளர்களை அடுத்தடுத்து பாஜகவினர் அவமரியாதை செய்துவ ரும் நிலையில் நாமக்கல் லில் பாஜகவினர் சன்  தொலைக்காட்சி நிருபரை தாக்கிய சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.  நாமக்கல் பூங்கா சாலையில் பாஜக பொதுக்கூட்டம் புதனன்று நடைபெற் றது. இதில் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். கூட்டம் முடிவடைந்து அண்ணாமலை பேட்டி ஏதும் இல்லை என தெரிவித்தார். இதனையடுத்து அங்கிருந்த செய்தியா ளர்கள் ஏன் பேட்டி இல்லை என கூறு கிறீர்கள் என கேட்டனர். அதற்கு நான் ஒன்றும் உங்கள் நிறுவனத்தில் வேலை செய்யவில்லை என ஊடகவியலா ளர்களை அவமதிக்கும் வகையில் நக்க லாக பேசிவிட்டு காரில் ஏறினார். அப்போது அங்கிருந்த பாஜகவினர் சன்  தொலைக்காட்சி செய்தியாளரை திட்ட மிட்டு தள்ளிவிட்டனர்.  இதையடுத்து, அண்ணாமலையின் கார் மீது செய்தியாளர் மோதுகிறார் என சொல்லி பாஜகவினர் சன் செய்தியா ளர் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். உடன டியாக அங்கிருந்த காவல்துறையினர் செய்தியாளரை மீட்டு அனுப்பி வைத்த னர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஊடகத்தினரை இழிவுபடுத்தும் பாஜகவினரின் செயல் பொதுமக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.