பொள்ளாச்சி, பிப்.3- திமுக பிரமுகரின் வீடு புகுந்து பாஜகவினர் நடத்திய வன்முறை தாக்குதலை கண்டித்து சனியன்று பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் அனைத்து அரசியல் சமுக இயக்கங் கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அயோத்தியில் ஜன.22 தேதி யன்று ராமர் கோவில் திறக்கப்பட் டது. பத்து ஆண்டுகால பாஜக ஆட்சி யில் மக்களுக்காக எந்த திட்டங்க ளையும் நிறைவேற்றதாத மோடி அர சாங்கம் மீண்டும் நாடாளுமன்ற தேர் தலில் வெற்றிபெற ராமர் கோவில் திறப்புவிழாவை தமது அரசியல் உள் நோக்கத்துக்காகவே நடத்துகிறது. என ராமர் கோவில் சம்பந்தமாக பலர் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். பொள்ளாச்சியில் திமுக பிரமுகர் தென்றல் செல்வராஜ் சமூக வலைத் தளத்தில் தமது கருத்தை பதிவிட் டார். அதை பொறுத்துக் கொள்ள முடி யாத பாஜக நகரச் செயலாளர் பரம குரு தலைமையில் 40 பேர் கொண்ட கும்பல் தென்றல் செல்வராஜ் வீட் டிற்குள் புகுந்து ரகளை செய்தனர். மேலும், வீட்டில் இருந்த மருமகள், மகள் உள்ளிட்ட பெண்களிடம் மிக தரக்குறைவாக பேசியதோடு இதை எதிர்த்து கேள்வி கேட்ட தென்றல் செல்வராஜ் மகன் மணிமாறன் தென்றலை கடுமையாக தாக்க முயற்சித்தனர். பாஜகவின் வன்முறை நோக்கத் துடன் செயல்பட்ட இந்த சம்பவத்தை கண்டித்து திமுக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட், தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், மதி முக உள்ளிட்ட அனைத்து அரசியல் சமுக இயக்கங்கள் சார்பாக ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக முன்னாள் மாவட்டச் செயலா ளர் தென்றல் செல்வராஜ் மற்றும் திமுக பேச் சாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸட் கட்சியின் தாலுகா செயலாளர் எம்.அன்பு, கே.மகாலிங்கம் காங்கி ரஸ் கட்சியின் நகரச் செயலாளர் காளி முத்து தந்தை பெரியார்திராவிடர் கழகம் நகரச் செயலாளர் மனோகரன் விசிக மண்டல செயலாளர் ச.பிரபு மதிமுக நகர செயலாளர் குகன்மில் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.