முக்கிய அரசியல் புள்ளிகள் பாஜகவில் சேர்வார்கள் என அண்ணாமலை கொக்க ரித்த நிலையில், இணைப்பு விழாவுக்கு யாரும் வராததால் நிகழ்ச்சி ரத்து செய்து பாஜ கவினர் ஓட்டம் எடுத்தனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணா மலை திங்களன்று மாலை 5 மணிக்கு கோயம் புத்தூரில் முக்கியமான நபர்கள் பாஜகவில் இணைய உள்ளதாகவும், தேதி, நேரம், இடத் துடன் கூறுகிறேன் என ஞாயிறன்று சென்னை யில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். இதனால் அதிமுகவை சேர்ந்த முக்கி யமான நபர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது முன்னாள் அமைச்சர்கள் பாஜக வில் இணையலாம் என எதிர்பார்ப்பு நிலவி யது. இந்த நிலையில் திங்களன்று கோவை - அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதி யில் இணைப்பு விழா நிகழ்ச்சி மற்றும் செய்தி யாளர் சந்திப்பு நடைபெறும் என பாஜக வினர் தெரிவித்து இருந்தனர். இந்த நிகழ்ச் சிக்கு சென்ற பத்திரிகையாளர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர். ஆனால், முக்கிய நபர்கள் யாரும் வர வில்லை. மேலும், பாஜக மாநிலத் தலை வர் அண்ணாமலையும் வராத நிலையில், மத் திய இணையமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் செய்தியாளர் களை சந்தித்தனர். அப்போது பாஜகவில் மாற்று கட்சியி னர் இணையும் நிகழ்ச்சி பிரதமரின் பாது காப்பு உள்ளிட்ட காரணங்களினால் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக பாஜக மாநிலத் துணைத்தலைவர் கே.பி. ராம லிங்கம் தெரிவித்தார். எல்.முருகன் பேசுகையில், பிரதமர் மோடி வருகை குறித்த செய்தி மக்களிடம் சேர வேண்டும் என்பதால், மாற்று கட்சியினர் இணைப்பு விழா நிகழ்ச்சி தள்ளிப் போய் உள்ளது. தமிழ் நாடு வேகமாக வளரக் காரணம் மோடியின் தனிப்பட்ட அக்கறையே காரணம். பாதுகாப்பு அம்சம் உள்ளிட்ட காரணங்களால் இணைப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சியில் இருந்தும் பாஜகவிற்கு வர உள் ளார்கள் என்றார். அப்போது இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்த செய்தியா ளர்களின் கேள்விக்கு கோபத்தோடு, எல்.முருகன் செய்தியாளர்களிடம் வாக்கு வாதம் செய்தார். பாஜகவின் இணைப்பு விழா நிகழ்ச்சி யில் பங்கேற்க நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப் பாளர் ராஜா அம்மையப்பன் வந்திருந்தார். இணைப்பு விழா நடைபெறாத நிலையில் செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட போது, “வேறு வேலையாக இங்கு வந்தேன். ஹோட் டலில் தங்கி இருந்தேன் என்றார். மேலும், “நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியுள் ளேன். நாளை பிரதமரை சந்தித்து இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண் டும் என வலியுறுத்த உள்ளேன். அவர்கள் பிர தமரை சந்திக்க வாய்ப்புத் தருவதாக கூறியுள் ளார்கள். நான் பாஜகவில் இணையவில்லை. நான் கட்சியில் இணைய வரவில்லை” என தெறித்து ஓடினார். (ந.நி)