districts

img

பாஜக தேர்தல் அறிக்கை சங்கல்பத்ரா அல்ல ”சங்கட பத்ராவாகத்தான்” இருக்கிறது - பேரா.ஜவாஹிருல்லா

கோவை, ஏப்.15- பாஜகவின் சார்பில் வெளியிடப் பட்ட ”சங்கல்பத்ரா” தேர்தல்  அறிக்கை, ”சங்கட பத்ராவாகத் தான்” மக்களிடம் சென்றுள்ளது என மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.  கோவை கரும்புக்கடை பகுதி யில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா செய்தி யாளரர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ கத்தில் இந்தியா கூட்டணிக்கு அமோ கமான ஆதரவு உள்ளது. கடந்த 10  ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கக் கூடிய பாஜக அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடிய பல வற்றை சிதறடித்துள்ளது. வரு கின்ற தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவின் அரசியல மைப்பு சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகளுக்கு தகுந்த பதி லடி அளிப்பார்கள் என்ற நம் பிக்கை தேர்தல் பரப்புரையின் போது காண முடிகிறது. ஞாயிறன்று, பாஜகவின் சார்பில் ”சங்கல்பத்ரா” என்ற  தேர்தல் அறிக்கையை வெளியிட் டுள்ளது. அதனை படித்துப் பார்க் கும் பொழுது அது ”சங்கட பத்ரா வாகத்தான்” இருக்கின்றது. இந்த  பாஜக தேர்தல் அறிக்கை மக்களை  ஏமாற்றும் தந்திரமாக உள்ளது.  காங்கிரஸ் அறிக்கை நடைமுறை யில் சாத்தியமாக இருக்க கூடிய வையாகவும், ஆக்கபூர்வமான அறிக்கையாகவும் உள்ளது.  அண்ணாமலையின் தேர்தல் விதிமீறல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், பாஜக வினர் எப்போதும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைத்து கொண்டு பல்வேறு காரியங்களை செய்யக் கூடியவர்கள். தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுத் தால் தான் நடுநிலையாக செயல்ப டுகிறது என்ற நம்பிக்கை மக்க ளுக்கு வரும். 10 மணிக்கு மேல்  மைக்கையும், லைட்டையும் உப யோகிக்க கூடாது, 10 மணிக்கு மேல் தேர்தல் பரப்புரை செய்வது சட்ட மீறல். இதனை இந்தியா கூட் டணியினர் செய்தால் விட்டு விடு வார்களா? என கேள்வி எழுப்பி னார். தொடர்ந்து பேசிய அவர், இந்தி யாவை காப்பாற்ற இந்தியா கூட்ட ணிக்கு வாக்களியுங்கள். கோவை  மற்றும் பொள்ளாச்சி தொகுதி மக்கள் திமுக வேட்பாளர்களான கணபதி ராஜ்குமார், கே.ஈஸ்வர சாமிக்கு உதயசூரியன் சின்னத் திற்கு வாக்களியுங்கள் என்றார்.