நாமக்கல், ஏப்.28- பரமத்திவேலூர் ஏல சந்தையில் வரத்து அதிகரித்ததால் வெற்றிலை விலை குறைந் துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ள னர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிரி டப்பட்டுள்ளது. இங்கு விளையும் வெற்றி லைகள் கர்நாடகா, கேரளா, குஜராத், மகா ராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்க ளுக்கும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங் களுக்கும் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப் படுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத் தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம் பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.9 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்திற் கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்து 500க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் ரூ.3 ஆயிரத்து 500க்கும் ஏலம் போனது. இந்நிலையில், வியாழனன்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம் பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.8 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்து 500க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதி யம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்திற் கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.2 ஆயிரத்து 500க்கும் ஏலம் போனது.