districts

சங்கரய்யாவிற்கு பட்டம் வழங்க மறுத்ததன் பின்னால் பிரிட்டிசாரும், அதன் கைக்கூலிகளும் உள்ளனர்

என்.குணசேகரன் பேச்சு கோவை, நவ.26- விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தால், அன்று பிரிட்டிஷ் அரசாங்கம் சங்க ரய்யாவுக்கு பட்டம் கொடுக்க மறுத்தது. இன்று அதன் கைக்கூலிகள் மறுத்து இருக் கின்றனர். பட்டம் பெறவில்லை என்றாலும் அவர் ஒரு மேதையாகவே திகழ்ந்தார் என சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் புகழாரம் சூட்டினார். விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக தலைவர்க ளில் ஒருவரான தோழர் என்.சங்கரய்யா படத் திறப்பு விழா மற்றும் புகழஞ்சலி கூட்டம் சனியன்று, காந்திபுரம் பகுதியில் உள்ள  மலையாள சமாஜம் அரங்கில் நடைபெற் றது. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் என்.குணசேகரன் கலந்து கொண்டு தோழர் சங்கரய்யாவுக்கு புகழஞ்சலி செலுத்தினார். இதன்பின் அவர் பேசுகையில், தோழர் சங்க ரய்யாவின் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்லாமல் தமிழக மக்க ளுக்கே ஈடு செய்ய முடியாத இழப்பு. 1930ல்  இந்தியாவில் சோசலிசத்தை கொண்டுவர வெள்ளையர்களின் ஆட்சிக்கு எதிராக போரா டிய பகத்சிங் உள்ளிட்ட தலைவர்கள் தூக் கிலிடப்பட்டார்கள். இதற்கு எதிராக நாடு முழு வதும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக கண்டன ஊர்வலங்கள் நடைபெற்றன. தூத்துக்குடி யில் நடைபெற்ற கண்டன ஊர்வலத்தில் 9  வயது சிறுவனாக தோழர் சங்கரய்யா கலந்து கொண்டு, நாட்டின் சுதந்திரத்திற்காக புரட்சி ஓங்குக என்று முழங்கினார். வாழ்நாள் முழுவதும் சோசலிச அரசியலை முழுமூச்சாக கொண்டு வாழ்ந்து மறைந்தவர் சங்கரய்யா. தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை வர லாற்றை இளம் தலைமுறைக்கு கொண்டு  சேர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கி றது. பட்டப்படிப்பு முடிக்காவிட்டாலும் ஒரு  மேதையைப் போல சரளமாக ஆங்கிலத்தில் உரையாற்றும் வல்லமை பெற்றவராக சங்க ரய்யா விளங்கினார். அன்று மதுரை அமெ ரிக்கன் கல்லூரியில் சங்கரய்யா பட்டம் பெற  பிரிட்டிஷ் அரசாங்கம் தடையாக இருந்தது, அன்று விடுதலைப் போராட்டத்தில் பங்கேற் காமல் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசுக்கு துணை நின்றவர்களின், வழித்தோன்றலாக இன்று இருப்பவர்கள் சங்கரய்யாவுக்கு பட் டம் கொடுக்க மறுத்திருக்கிறார்கள். அதற் காக அவர் கவலைப்படவில்லை. சுதந்திரத் திற்கு பின் நாட்டில் சோசலிசம் மலர வேண் டும் என்ற நோக்கத்திலேயே சங்கரய்யா உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தோழர்கள் விடுத லைப் போரில் கலந்து கொண்டனர்.

இந்த  மாறுபட்ட கொள்கையால் தான் கம்யூ னிஸ்ட்டுகள் பல இடங்களில் வேட்டையாடப் பட்டார்கள். இந்தியாவின் பரிபூரண சுதந்தி ரத்திற்காகவும், கொள்கைக்காகவும், பிரிட் டிஷ் ஆட்சியில் 8 ஆண்டு காலம் சிறைவாசம், 9 ஆண்டு காலம் தலைமறைவு வாழ்க்கை யில் இருந்தவர் சங்கரய்யா, நாட்டின் விடுத லைக்குப் பின்பு, ஏழை எளிய மக்கள், விவசா யிகள், பாட்டாளி மக்களின் பிரச்சனைகளுக் காக தொடர் போராட்டங்களை முன்னெடுத்த வர் சங்கரய்யா. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பெண்கள் அதி கமாக வர வேண்டும் என சங்கரய்யா விரும்பி னார். அதன்படி 70 மற்றும் 80 ஆம் ஆண்டு கால  கட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில்  அதிக பெண்கள் இருந்தார்கள். மாநிலத் தலைமையின் வற்புறுத்தலுக்குப் பிறகே தனது வாழ்க்கை வரலாறு எழுத தோழர் சங்க ரய்யா ஒப்புக்கொண்டார். அந்த அளவுக்கு கட்சியின் கட்டுப்பாட்டை மீறாமல் தன்னடக் கத்தோடு செயல்பட்டவர் சங்கரய்யா. ஒவ் வொரு கூட்டங்களையும் சங்கரய்யா நிறைவு செய்யும்போதும் வங்கம், திரிபுரா, கேரளா போல் தமிழ்நாட்டை மாற்றுவோம் என கூறித் தான் நிறைவு செய்வார். உழைக்கும் மக்கள் சுரண்டலில் இருந்து விடுதலை பெற வேண் டும் என்பதற்காகத்தான் அவர் ஒவ்வொரு கூட்டங்களின் நிறைவிலும் இவ்வாறு முழக்க மிட்டார். தோழர் சங்கரய்யாவின் கனவு மற் றும் லட்சியப் பாதையில் தொடர்ந்து பய ணித்து சோசலிச சமூகம் வளர பாடுபடுவோம் என உறுதி ஏற்றுக் கொள்வோம். இவ்வாறு குணசேகரன் பேசினார்.