திருப்பூர், நவ.25- திருப்பூர் மாநகராட்சி உள்பட மாவட்டத்தில் மொத்தம் மூன்று இடங்களில் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்கள் சனியன்று நடைபெற்றன. திருப்பூர் மாநகராட்சி, 1ஆவது வார்டு, தியாகி குமரன் காலனியில் எஸ்.எம்.எஸ் திருமண மண்டபத்தில் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இம் முகாமை மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார்.ஜி.கிரியப்பனவர் துவக்கி வைத்தார். இம்முகாமில் கர்ப்பி ணிகளுக்கான பேறுகால ஊட்டச்சத்து, மக்களைத் தேடி மருத்துவ பயனாளிகளுக்கான மருத்துவ பெட்டகம் உட்பட நலத்திட்ட உதவிகளை மாநகர துணை மேயர் எம்.கே.எம். பாலசுப்பிரமணியம் வழங்கினார். திருப்பூர் மாநகராட்சி மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், ஸ்ரீ சரண் மருத்து வமனை குழுவினர், வாசன் ஐ கேர் குழுவினர், ஹியரிங் மற்றும் கேர் அமைப்பினர், மாவட்ட காசநோய் மருத்துவக் குழுவினர், மாவட்ட எய்ட்ஸ் மருத்துவக்குழுவினர் இணைந்து மருத்துவ பரிசோதனை சிகிச்சைகள் மேற்கொண்டனர். இம்முகாமில் ஆண்கள் 412 பேர், பெண் கள் 360 பேர் என மொத்தம் 772 நபர்கள் பங்கேற்று பயனடைந் தனர். ரூ.9.840 மதிப்பிலான மருந்து, மாத்திரைகள், நோயாளி களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. அதேபோல் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், வள்ளியரச்சல் ஊராட்சியில் உள்ள கண பதிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், கீரனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றன. தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன் தலைமையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் சனியன்று இம்முகாமைத் தொடக்கி வைத்தார். மேலும் மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 9 பயனாளிக ளுக்கு மருந்து பெட்டகங்களையும், 11 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், 2 தாய்மார்களுக்கு மகப் பேறு சஞ்சீவி பெட்டகளையும் வழங்கினார். இம்முகாமில், வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவ லர் மருத்துவர் ராஜலட்சுமி, காங்கேயம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் முரளி, கீரனூர் ஊராட்சி மன்றத்தலை வர் ஈஸ்வரமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் அய்ய னார், உள்ளாட்சி பிரிதிநிதிகள், மருத்துவர்கள், பொதுமக் கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.