சேலம், ஜூலை 16- கன்னங்குறிச்சி, மூக்கனேரியை தூர்வாரி, அழகுபடுத்தும் பணி குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஞாயிறன்று நேரில் ஆய்வு செய்தார். சேலம் மாவட்டத்தில் நடை பெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட் டப்பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஞாயி றன்று ஆய்வு மேற்கொண்டார். அப் போது அவர் பேசுகையில், வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மாந கராட்சிப் பகுதிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்ப டுத்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. சேலம் சீர்மிகு திட்டத் தின்கீழ் அம்மாபேட்டை, ஜோதி டாக் கீஸ் பிரதான சாலையை சீர்மிகு சாலை ாக ரூ.9.20 கோடி மதிப்பீட்டில் அமைக் கப்பட்டு வருகிறது. இத்திட்டமானது மழைநீர் வடிகால் சாலையின் இரு புறமும் அமைத்தல், குடிநீர் குழாய் மற்றும் கேபிள்கள் கொண்டு செல்ல சாலையின் ஓரத்தில் வழிதடங்கள் அமைத்தல், நடைபாதை இருபுற மும் அமைத்தல், வடிகால் சுத்தம் செய்ய இடைவெளி மற்றும் இரும்பு கிரில் கொண்டு மூடுதல், நடைபாதை யில் சிலிண்டரிக்கல் தடுப்பு உருளை அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அம்மாபேட்டை, அய்யாசாமி பூங்காவில் 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக் கும் பணி நடைபெற்று வருகிறது. இப் பணி 90 சதவிகிதம் முடிக்கப்பட்டுள் ளது. இதனால் சேலம் மாநகராட்சி யில் உள்ள 34,35,39 மற்றும் 40 ஆகிய கோட்டங்களில் உள்ள குடியிருப்புக ளுக்கு தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்படும். கடந்த ஜூன் 11 ஆம் தேதியன்று நடைபெற்ற அரசு விழாவில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் கன்னங்குறிச்சி, மூக்கனேரியில் புனரமைப்பு மற்றும் அழகுபடுத்தும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டதையொட்டி,
தற்பொ ழுது நடைபெற்று வரும் இப்பணி குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட் டது. மூக்கனேரியை பொறுத்தவரை 2,83,375 ச.மீ தூர்வாரும் பணியும், கரைகளில் பொதுமக்களுக்கான நடைபாதை 900 மீட்டரும், மின் விளக்குகள், நுழைவு வாயில் பணி, நீர் வசதிகள், விளையாட்டு உபகர ணங்கள், இருக்கை வசதிகள் என பல் வேறு வசதிகளுடன் பொதுமக்க ளுக்கு பொழுதுபோக்கிற்குரிய இட மாக 12 மாதங்களில் அமைக்க நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநகராட்சியில் நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சி திட்டப்பணி களையும் குறிப்பிட்ட காலத்தில் தர மாக செய்து முடித்து, பொதுமக்க ளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அலுவலர்களுக்கு உத் தரவிடப்பட்டுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். முன்னதாக, இந்த ஆய்வின் போது சேலம் மாநகராட்சி மேயர் ஆ. ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணை யர் சீ.பாலச்சந்தர், கூடுதல் ஆட்சியர் அலர்மேல்மங்கை, சேலம் நாடாளு மன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்தி பன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப் பினர் ரா.ராஜேந்திரன், மாவட்ட வரு வாய் அலுவலர் பெ.மேனகா, முன் னாள் அமைச்சர் டி.எம்.செல்வகண பதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.