districts

img

குடியிருப்புக்குள் புகுந்த கரடிகள் - மக்கள் அச்சம்

உதகை, நவ.26- கல்லட்டியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த இரண்டு கரடிகள் கொள்ளையர்களை போல லாவகமாக ஷட்டரை தூக்கிவிட்டு மூன்று டீக்கடைக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்திய காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதி வாகியுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நீலகிரி மாவட்டம் 60 சதவீதத்திற்கும் அதிகமாக வனப் பகுதியை கொண்டுள்ளதால், இங்கு யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை உள்பட பல்வேறு வன விலங்குகளும் அதிக  அளவில் வசித்து வருகின்றன. இந்நிலையில் சமீப காலமாக  வனப்பகுதியில், உணவு பற்றாக்குறை அதிகரித்து வருவ தாக கூறப்படுகிறது. மேலும், வனவிலங்குகளின் வலசை பாதையில், அடுத்தடுத்து கட்டப்படும் கட்டிடங்களின் காரண மாக வனவிலங்குகள் வழிதவறி ஊருக்குள் புகுந்து விடு கின்றன. இதனால், மனித- வனவிலங்கு மோதல் ஏற்பட்டு  உயிர் இழப்பு ஏற்படுகிறது.

இதை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஊட்டி அடுத்த  கல்லட்டி பகுதியில் கடந்த  இரண்டு நாட்களுக்கு முன் அதிகாலை நேரத்தில் குடியி ருப்பு பகுதிக்குள் கரடிகள் புகுந்தது. பின்னர் இவை அந்தப்  பகுதியில் உள்ள 3 கடைகளின் ஷட்டர்களை கொள்ளையர் களை போல லாவகமாக தூக்கி விட்டு உள்ளே சென்று பொருட்களை சேதபடுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டன.  டீக்கடைக்குள் புகுந்த அந்த கரடிகள் பாத்திரங் களையும் உணவு பொருட்களையும் வெளியில் எடுத்து சேதப் படுத்தியது. அத்துடன் ஜோடியாக சேர்ந்து கொண்டு வீடு வீடாக உணவு தேடி சென்றன. இதனால் அந்த கிராம மக்கள்  அச்சமடைந்துள்ளனர்.  இந்நிலையில் கரடிகள் கடைகளுக்குள் சென்று வெளியில் வந்து சுற்றி திரிந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளியானதால் அந்த பகுதி மக்கள் கூடுதல் பதட்டம் அடைந்துள்ளனர். இதையடுத்து 2 கரடி களையும் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என ஊட்டி  வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். கடந்த வாரம் மஞ்சூர் பகுதியில் அச்சுறுத்தி வந்த  கரடியை பிடித்து முக்குறுத்தி வனப்பகுதியில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.