districts

img

தோழர் என்.சி.பி எனும் மகத்தான மக்கள் போராளி!

அவிநாசி அருகே நடுவச்சேரி, வடுகபா ளையம் மக்களின் அடிப்படைத் தேவைக ளுக்காக களத்திலிருந்து பணியாற்றிய களப்போராளி மகத்தான தோழர் எம்.சி. பழனிச்சாமி. அவிநாசி ஒன்றியம் நடுவச்சேரி ஊராட் சியில் சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த வர் என்.சி.பழனிச்சாமி. இவர் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இந்த  நிலையில் அனுப்பர்பாளையம் பாத்திரத்  தொழிலாளியாக பணியாற்றிக் கொண்டி ருந்தபோது சிஐடியு தொழிற்சங்கத்தில் இணைத்துக் கொண்டுள்ளார். இதைய டுத்து 1984 ஆம் வருடத்தில் என்.சி.பழனிச் சாமி, சிவசாமி, செந்தில், ஆகியோரின் முயற்சியால் நடுவச்சேரி பகுதியில் இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளை அமைப்பை உருவாக்கினர். இதனைத் தொடர்ந்து பாத்திரத் தொழில் வேலை குறைந்தபோது, அவிநாசி வடக்கு பகுதி முழுவதும் முறுக்கு விற்பனையை துவக்கி னார். இத்தொழிலானது குடும்ப வருமா னத்திற்கு பேருதவியாக இருந்தது. இதன் காரணமாக இவரை முறுக்குக்காரர் என்று  அப்பகுதியில் அழைத்து வந்தனர். இத்தொ ழில் நடத்தி வந்தபோது சேவூர், அவிநாசி உள்ளிட்ட சில இடங்களில் வாலிபர் சங்க கிளை அமைப்பை உருவாக்கினார்.  இச்சூழலில் நடுவச்சேரி பகுதியில் கள் ளச்சாராய விற்பனை தலைவிரித்து ஆடி யது. இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு கள்ளச்சாராயத்தை ஒழிக்க என்.சி.பி கோரிக்கை மனு அளி த்தார். விசாரணைக்கு வந்த காவல்துறை அதிகாரி இவரை மிரட்டியதால் ஆக்ரோச மாக கண்டன குரல் எழுப்பினார். இதனால்  கோபமடைந்த காவல் அதிகாரி எம்.சி. பழனிச்சாமியை காவல் நிலையம் அழைத்துச் சென்று கடுமையாக தாக்கி னார். இத்தகவல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சிக்கு தெரிந்து அனைத்துக்கட்சி கூட்டத் தைக் கூட்டி இயக்கம் நடத்த திட்டமிட்ட போது காவல் அதிகாரி நிர்பந்தமான நிலை யில் என்.சி.பழனிச்சாமியை விடுவித்தார்.

இதனைத் தொடர்ந்து 2007 ஆம் வருடம்  ஒன்றுபட்ட கோவை மாவட்டம் பூசாரிகள் ஊழியர்கள் சங்கம் என்ற அமைப்பை முதன் முதலில் உருவாக்கினார். அச்சங்கத்தின் சார்பில் கோவில் பூசாரிகளுக்கான கோரிக் கைகளை வலியுறுத்தி அவிநாசி சாலையில்  மணி அடித்து ஆர்ப்பாட்டம் நடத்தி ஒரு  தாக்கத்தை ஏற்படுத்தினார். இது மட்டுமின்றி  நடுவச்சேரி பகுதியில் உள்ள சிவலாபுரி  அம்மன் கோவிலில் பூசாரி ஊழியராகவும்  பணியாற்றி வந்தார் என்பது குறிப்பி டத்தக்கது. மேலும் நடுவச்சேரி பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான குடியிருப்பு இருந்தது அதில் ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களில் தகுதியுள்ள 60க்கும் மேற்பட்ட மக்களுக்கு 1995 ஆம் வருடத்தில் பட்டா  வழங்கப்பட்டது ஆனால் 10 ஆண்டுகளாக  எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து  கொடுக்கவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராக என். சி.பி தேர்வு செய்யப்பட்டு அப்பகுதி மக்க ளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்  கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  கையெழுத்து இயக்கம் நடத்தினார். துறை  சார்ந்த அதிகாரிகளுக்கு மனு அளிக்கப் பட்டு அதிகாரிகள் அதனை கண்டு கொள்ள வில்லை. இச்செயலை கண்டித்து மக்களை  திரட்டி ஆர்ப்பாட்டம், தொடர் உண்ணாவிர தம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குடிநீர், தெருவி ளக்கு, சாலை வசதிகள் அமைத்து தர பாடு பட்டார். ஒரு கோரிக்கையின் மீது இயக்கம்  என திட்டமிட்டால் அக்கோரிக்கை நிறைவே றும் வரை விடாப்பிடியான போராட்டங் களை நடத்தி வென்றெடுக்கும் களப்போ ராளி தோழர் என்சிபி.

போராட்டம் என வந்துவிட்டால் பெரும் பாலான இயக்கங்களில் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக அரசு அதிகாரிகள்  வாய்மொழி உத்தரவு அளித்தால் அதை ஏற்றுக் கொள்ளாமல், எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தால் மட்டுமே போராட் டத்தை வாபஸ் பெறுவார். சாதாரண தொழி லாளியாக இருந்துவந்த என்.சி.பி வாலிபர்  சங்க ஒன்றிய குழு, விவசாய தொழிலாளர்  சங்கத்தின் ஒன்றிய செயலாளராகவும், கட்சி யின் கிளைச் செயலாளராகவும், கட்சியின், அவிநாசி ஒன்றிய குழு உறுப்பினராகவும், கோவை மாவட்ட பூசாரிகள் சங்கத்தை உருவாக்கியவராகவும், சிறப்பாக செயல் பட்டவர். அவிநாசி வடக்கு பகுதியில் கட்சியை கொண்டு செல்வதற்கு உறுதுணையாக இருந்து வந்தவர். மேலும் கட்சி ஊழியர்களி டம் என்.சி.பி. “மக்களிடம் செல், மக்களிடம் கற்றுக்கொள், மக்களுக்காக போராடு!” என எப்போதும் கூறுவார். மகத்தான கம்யூ னிஸ்டாய் நியாயங்களுக்காக ஓங்கி ஒலித்த  அவரின் கம்பீரமான குரல் திசை எங்கும்  ஒலித்துக் கொண்டே இருக்கும்! செங்கொடி  இயக்கம் சிறக்கட்டும்! இவருக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடுவச்சேரி  கிளை பகுதியில் படத்திறப்பு விழா புகழஞ் சலி கூட்டம் ஞாயிறன்று நடைபெறுகிறது. என்.சி.பழனிச்சாமி படத்தை மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் திறந்து வைக்கி றார். மேலும் புகழஞ்சலி கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துகண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.நந்தகோ பால், மாவட்ட குழு உறுப்பினர் மற்றும் அவிநாசி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கிளைச் செயலாளர்கள் உட்பட பல்வேறு  அமைப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள்  கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்துகின்ற னர்.

ஆர்.பழனிசாமி