சுதந்திரப் போராட்ட வீரர் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 5 மற்றும் நினைவு நாளான மார்ச் 5 அன்று அவரது உருவச் சிலைக்கு அரசு மரியாதை செலுத்துவதற்கு பரிந்துரை செய்யக்கோரி மதுரை மாநகராட்சி மேயர் வ. இந்திராணி , துணை மேயர் டி. நாகராஜன் ஆகியோரிடம் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் நேரில் மனு அளித்து வலியுறுத்தப்பட்டது. மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் கே.அலாவுதீன், பொருளாளர் எம்.ஜான்சன், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மனு அளித்தனர்.