கோவை, மார்ச் 3- கோவையை அடுத் துள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் வறட்சியால் வெகுவாக சரிந்துள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழையில்லாத தால், டாப்சிலிப் அருகே உள்ள 72 அடிகொண்ட பரம்பிக்குளம் அணை கடந்தாண்டு ஜூன் மாதத்தில் 15அடியாக இருந்தது. அதன்பின் பெய்த தென்மேற்கு பருவமழை யால் பரம்பிக்குளம் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. மேலும், சோலையார் அணையிலி ருந்தும் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்த தால், நீர்மட்டம் உயர்ந்து முழு கொள் ளளவை எட்டியது. தற்போது, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், மழையின்றி தண்ணீர் வரத்து மிகவும் குறைந்ததால், பரம்பிக்்குளம் அணையின் நீர் மட்டம் விரைவாக குறைகிறது. தற்போது பரம்பிக் குளம் அணைக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 20கன அடியாக குறைந்துள்ளது. நீர்மட்டம் 30அடியாக சரிந்துள்ளது.