திருப்பூர், ஏப்.2– கடந்த 10 ஆண்டு கால தொழிலா ளர் விரோத பாஜக அரசைத் தோற் கடித்து, இந்தியா கூட்டணி வேட்பா ளர்களை ஆதரித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று தொழிலா ளர்களுக்கு, திருப்பூர் அனைத்து பனி யன் தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன. திருப்பூர் சிஐடியு மாவட்ட அலுவ லகத்தில் செவ்வாயன்று அனைத்து பனியன் தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. சிஐடியு பனி யன் தொழிலாளர் சங்கத் தலைவர் சி.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சிஐடியு பனியன் சங் கப் பொதுச்செயலாளர் ஜி.சம்பத், பொருளாளர் கே.நாகராஜ், ஏஐடியுசி பனியன் சங்க பொதுச்செயலாளர் என்.சேகர், நிர்வாகி செந்தில்குமார், எல்பிஎப் பனியன் சங்க பொதுச் செயலாளர் க.ராமகிருஷ்ணன், தலை வர் ஜி.பாலசுப்பிரமணியம், ஐஎன் டியுசி செயலாளர் அ.சிவசாமி, நிர்வா கிகள் செந்தில், ரஜினி, எச்எம்எஸ் செயலாளர் ஆர்.முத்துசாமி, எம்எல்எப் செயலாளர் மு.சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு: ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வழங்குவோம் என தேர்தல் வாக்கு றுதி அளித்த பாஜக, புதிய வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தராதது மட்டு மின்றி, ஏற்கெனவே இருக்கும் வேலைவாய்ப்பையும் சீர்குலைத் துள்ளது. முதலாளிகளின் வெறித் தனமான லாபத்தைப் பெருக்குவதற் காக, தொழிலாளி வர்க்கம் நூற் றாண்டு காலமாகப் போராடிப் பெற்ற சட்டஉரிமைகளைப் பறித்துள்ளது. பாஜக அரசின் தவறான கொள் கைகள் காரணமாக வேலைவாய்ப்பு நகரமான திருப்பூர் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளது. குறிப்பாக ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, கொரோனா பொது முடக்கம், பஞ்சு, நூல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு, டிராபேக் குறைப்பு உள்ளிட்ட கார ணங்களால் திருப்பூர் நிலைகுலைந் துள்ளது. கணிசமான சிறு, குறு, நடுத் தர நிறுவனங்கள், ஜாப் ஒர்க் நிறுவ னங்கள் தத்தளித்து வருகின்றன. ஒரு பகுதி நிறுவனங்கள் தொழிலில் இருந்தே அப்புறப்படுத்தப்பட்டுவிட் டன. அத்துடன் வங்கதேசத்திலிருந்து தாராள வர்த்தக ஒப்பந்தத்தின்படி, 2016 ஆம் ஆண்டு இங்கு வந்த ஆடை களின் மதிப்பு 152 மில்லியன் டாலராக இருந்தது. தடுப்புவரி நீக்கப்பட்ட பிறகு 2022ஆம் ஆண்டு இங்கு வரக் கூடிய ஆடைகள் மதிப்பு 750 மில்லி யன் டாலருக்கு மேல், அதாவது ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.
இதைக் கட்டுப்படுத்த பாஜக அரசு எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. இத னால் உள்நாட்டு தொழில் துறையி னர், தொழிலாளர் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு தொழிலாளர்களைக் கடுமை யாக பாதித்துள்ளது. இந்த அடிப்ப டைப் பிரச்சனைகளில் இருந்து உழைக்கும் மக்களைத் திசை திருப்பு வதற்கு, மதவாத வெறுப்பு அரசி யலை பரப்பி வருகிறது. எனவே, பேரழிவிலிருந்து திருப் பூரை மீட்பதற்கு, தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு, வாழ்வுரிமையை பாதுகாப்பதற்கு பாரதிய ஜனதா அரசை நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடையச்செய்ய வேண் டும். உழைக்கும் மக்கள் நலனைப் பாதுகாக்கவும், நாட்டைப் பாதுகாக் கவும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவ ளித்து மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும். திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, நீலகிரி ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளில் இந் தியா கூட்டணி வேட்பாளர்களை பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத் தில் வெற்றி பெறச் செய்ய வேண் டும். இதற்காக, தொழிற்சங்கங்கள் சார்பில் 10 ஆயிரம் துண்டறிக்கை களை வெளியிட்டு, வரும் ஏப்.8 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை தொழி லாளர்களை சந்தித்துப் பிரச்சாரம் செய்வது என்றும் தொழிற்சங்க நிர் வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.