உடுமலை, அக்.6- உடுமலையில் கல்வி கடன் கேட்டு விண் ணப்பித்து ஓராண்டுக்கும் மேலாக கடன் தர மறுத்துவரும் உடுமலை சென்ரல் வங்கி கிளை நிர்வாகத்தை கண்டித்து அந்த வங்கி யின் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைமையில் வியாழனன்று காத்தி ருப்பு போராட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 15 நாட்களில் மாணவருக்கு கல்விக்கடன் தரு வதாக வங்கி நிர்வாகம் உறுதியளித்தது. உடுமலைப்பேட்டை தாலுக்கா கண்ணம நாயக்கனூர் பகுதியை சேர்ந்த அமுதபாரதி என்ற மாணவர் கோவை கற்பகம் பல்கலை கழகத்தில் தற்பொழுது மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் கல்விக்கடன் கேட்டு கடந்த ஓராண்டுக்கு முன்பு உடுமலை சென்ட்ரல் வங்கி கிளையில் விண்ணப்பித்து உள்ளார். ஆனால் வங்கி இவருக்கு கடன் தாரமல் அதற் கான காரணங்களை சொல்லாமல் இழுத்த டித்து வந்துள்ளது. வங்கி நிர்வாகத்திடம் மார்க்சிஸ்ட் கட்சி தலையிட்டு கேட்டபிறகு பெற்றோரின் வீட்டுக்கடன் உள்ளதால், மக னுக்கு கல்விக்கடன் வழங்க முடியாது என்று தெரிவித்தனர். பல மாதங்களாக முறையான பதில் சொல்லாமல் தற்போது திடீரென கல் விக்கடன் தரமுடியாது என்று வங்கியின் பதிலால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள் ளனர்.
எழுத்துப்பூர்வமாக எந்த பதிலும் சொல் லாமல் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பெற் றோரையும், மாணவரையும் மனஉளைச்ச லுக்கு ஆளாக்கிய உடுமலை சென்ட்ரல் வங்கிக் கிளை மீது நடவடிக்கை எடுத்து மாண வனுக்கு கல்விக்கடன் கிடைக்க தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி தலைமை யில் வங்கியின் முன்பாக வியாழனன்று காத் திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இப்போ ராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன் தலைமையில், உடுமலை ஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாலதண்டபணி, ராஜகோ பால், முருகவேல், சித்ரா, தமிழ்த்தென்றல், அருள்பிரகாஷ் மற்றும் வாலிபர் சங்கத்தின் கருப்புசாமி, லோகேஸ்வரன் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சுந்தரம் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். வங்கியின் முன்பாக நடைபெற்ற இந்த காத்திருப்புப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தனர். இதையடுத்து உடு மலை வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் கோட்டாட்சியர் ஜஸ்வந்த்கண்ணன் தலைமையில் வங்கியின் அதிகாரி, காவல் துறை மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் கள், மாணவரின் பெற்றோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வங்கியின் தரப்பில் 15 நாட்களுக்குள் கல்விக்கடன் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி தரப்பட்டது. இதை ஏற்று, காத்திருப்புப் போராட்டம் முடித்துக் கொள் ளப்பட்டது.