districts

மாணவி உயிரிழப்பு: நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா விற்க தடை

நாமக்கல், செப்.18.  ஷவர்மா சாப்பிட்ட மாணவி நாமக்கல் மாவட்டத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஷவர்மா விற் பதற்கு தடை விதித்து நாமக்கல் மாவட்ட ஆட் சியர் உத்தரவிட்டுள்ளார்.  நாமக்கல் பரமத்தி சாலையில் ஐவின்ஸ் என்கிற உணவகத்தில், சனியன்று, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு விடுதியில் தங்கி பயிலும் மாணவ,  மாணவிகள் 10 பேர் ஷவர்மா, பிரைடு ரைஸ்  உள்ளிட்ட உணவு வகைகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. மேலும், விடுதியில் தங்கியி ருந்த சில மாணவர்களுக்கும் ஷவர்மாவை பார்சல் வாங்கிச் சென்றனர். இதையடுத்து விடுதியில் இருந்த மாணவர்கள் இரவு 10  ணியளவில் சவர்மாவை சாப்பிட்டுள்ளனர். இந் நிலையில் ஞாயிறன்று காலை திடீரென 6 மாணவிகள், 7 மாணவர்கள் என மொத்தம் 13  பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் மற்றும் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட் டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட னர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை  அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மருத்துவ மனை வளாகத்தில் உள்ள காய்ச்சலுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த நாமக் கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவக் கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, எந்த உணவகத்தில், என்ன உணவை சாப்பிட்டார்கள்? என கேட்ட றிந்தார். இதைத்தொடர்ந்து அந்த ஓட்டலுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் உமா நேரில் சென்று ஆய்வு நடத்தி னார். அந்த உணவகத்தில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அழித்து, கடைக்கு நோட் டீஸ் வழங்கி ‘சீல்’ வைக்க உணவு பாது காப்புத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உமா உத்தரவிட்டார். இதையடுத்து உண வகத்தில் உள்ள இறைச்சிகள் மற்றும் உண வுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ‘சீல்’  வைத்தனர்.இதனிடையே கடந்த சில நாட்க ளுக்கு முன்பு இதே உணவகத்தில், சாப்பிட்ட  9 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப டுத்தி உள்ளது.  நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பழனி சாமி தெருவை சேர்ந்தவர் சுஜாதா. இவரது மகள் கலையரசி (14). இவர் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் கடந்த சனி யன்று,

மாலையில் சுஜாதா, கலையரசி, மற் றும் கலையரசியின் மாமா, அத்தை உள்ளிட் டோர் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சென்று  பார்சல் வாங்கி வந்து வீட்டில் வைத்து சாப் பிட்டனர். அதன் பிறகு மாணவி கலைய ரசிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட் டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுஜாதா, மகளை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார்  மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த னர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது. தொடர்ந்து வீட்டில் இருந்து மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு மாணவி சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் திங்களன்று காலை மாணவி கலையரசி சிகிச்சை பல னின்றி பரிதாபமாக இறந்தார். மாணவி உடலை பார்த்து அவரது தாய் சுஜாதா கதறி அழு தார்.  இதுகுறித்து காவல்துறையினர் தனியார் மருத்துவமனைக்கு சென்று மாணவிக்கு என்ன மாதிரி சிகிச்சை அளிக்கப்பட்டது? மாணவி வீடு திரும்பும்போது அவரது உடல்  நிலை எவ்வாறு இருந்தது? என மருத்துவர் களிடம் விசாரணை நடத்தினர். பின்னர், உண வக உரிமையாளர் உள்ளிட்ட மூவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ேமலும், உணவகத்திற்கு இறைச்சி வழங்கிய இறைச் சிக் கடையிலும் போலீசார் விசாரணை மேற் கொண்டனர். இதனைத்தொடர்ந்து, மேலும் நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள உண வகங்களில் ஷவர்மா மற்றும் கிரில் சிக்கன் விற்பனை செய்வதற்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.