districts

img

வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வலியுறுத்தி விசிக ஆர்ப்பாட்டம்

நாமக்கல், பிப்.23- வரும் நாடாளுமன்றத் தேர்த லில் வாக்குச்சீட்டு முறையை அமல் படுத்த வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர் தலில் வாக்குச்சீட்டு முறையை மீண் டும் நடைமுறைப்படுத்த வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக் களிக்கும் வாக்காளர் எந்த சின்னத் தில் வாக்களித்தாரோ, அந்த சின் னத்தின் ஒப்புகை சீட்டை வாக்களிக் கும் வாக்காளருக்கு வழங்க வேண் டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வெள்ளியன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விசிக நாமக்கல் மைய மாவட்டச் செயலாளர் நீலவா னத்து நிலவன் தலைமை வகித்தார். இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் கோட்டை மைதானத் தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் இளஞ் சேகுவேரா, சேலம் நாடாளு மன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்தி பன், விசிக மண்டலச் செயலாளர் இமயவர்மன் உள்ளிட்டோர் கண் டன உரையாற்றினர். இதில் விசிக மாநகர் மாவட்டச் செயலாளர் காஜா மைதீன், மாநகரச் செயலாளர் மொழி அரசு, புறநகர் தெற்கு செயலாளர் சுந்தர், சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் தெய்வானை, மேற்கு  மாவட்டச் செயலாளர். மெய்யழ கன் கிழக்கு மாவட்டச் செயலாளர் கருப்பையா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகன், இந்திய யூனியன் முஸ் லிம் லீக் மாவட்டத் தலைவர் சையத்  மூசா, முஸ்லிம் முன்னேற்ற கழக செயலாளர் ஷேக் முகமது உட்பட பலர் பங்கேற்றனர்.  தருமபுரி தருமபுரி தொலைபேசி நிலை யம் அருகே விசிக மாவட்டச் செய லாளர்கள் சி.கே.சாக்கன்சர்மா, கருப்பண்ணன், த.கு.பாண்டியன்  ஆகியோர் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றுது. விசிக மாநில அமைப்பு செயலாளர் தமிழ்செல் வன்,  மண்டல துணைச்செயலாளர் மின்னல் சக்தி, பாராளுமன்ற தொகுதி செயலாளர் கலைவாணன், விவ சாயிகள் பிரிவு மாநில துணைச் செயலாளர் கிள்ளிவளவன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் ஏ.குமார், மதிமுக மாவட்டச் செயலாளர் ராமதாஸ், திராவிட கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் சுபேதார், இந்திய யூனியன் முஸ் லிம் லீக் மாவட்ட துணைத்தலை வர் சிக்கந்தர், சிபிஐ(எம்எல்) மாவட் டச் செயலாளர் கோவிந்தராஜ், ஆதித்தமிழர் பேரவை மாவட்டச்  செயலாளர் ராஜ்குமார், ஆம் ஆத்மி கட்சி மாவட்டத் தலைவர் ஜெபசிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.