மே.பாளையம், மார்ச் 4- மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலை யில் கம்பீரமாக நடந்து வந்த பாகுபாலி காட்டு யானை, போக்குவரத்தை மறித்தபடி நடு ரோட்டில் நின்றதால், வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக ஆண் காட்டு யானையொன்று சுற்றி வருகி றது. இதன் நீண்ட தந்தங்கள் மற்றும் பிரம்மாண்ட உருவத்தால் இப்பகுதி மக்கள் இந்த யானையை பாகுபலி என பெயரிட்டு அழைத்து வருகின்றனர். இது அருகில் தென்படும் விவசாய பயிர்களை சேதப்ப டுத்துவதும் இதன் வழக்கமாகி விட்டது. தொடர்ந்து, பல ஆண்டுகளாக மேட்டுப்பா ளையம் பகுதியிலேயே சுற்றி வருவதால் இதனை கும்கி யானைகளின் உதவியுடன் பிடித்து இடமாற்றம் செய்ய, வனத்துறை எடுத்த முயற்சிகளும் தோல்வியுற்றன. இந்நிலையில், திங்களன்று வனப்பகுதி யில் இருந்து வெளியேறிய யானை மேட்டுப்பாளையம் -கோத்தகிரி சாலையை கடந்து மறுபுறமுள்ள வனப்பகுதிக்குள் செல்வதற்காக முயன்றது. அப்போது இதனை வேடிக்கை பார்க்க சாலையோரம் நின்றிருந்த ஒரு காரை அங்கிருந்து விலகி செல்ல எச்சரிக்கும் விதமாக லேசாக முட்டி அச்சுறுத்தியது. இச்சம்பவத்தால் மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலை யில் போக்குவரத்து தடைபட்டதோடு பரபரப் பான சூழல் நிலவியது. வனத்தினுள் வறட்சியான சூழல் நிலவுவதால், யானைகள் மட்டுமின்றி காட்டு விலங்குகளும் வனம் சார்ந்த சாலை களை கடந்து செல்ல துவங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் பாதுகாப்புடன் செல்ல வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள னர். தருமபுரி இதேபோன்று, தருமபுரி நகர் பகுதியை ஒட்டியுள்ள ஏ.கொல்லஹள்ளியில், திங்க ளன்று காலை ஒற்றை யானை ஒன்று சுற்றி திரிந்தது. பொதுமக்கள் அளித்த தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் காவல் துறை யினர், ஊருக்குள் புகுந்த யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்ட னர். கடந்த நான்கு நாட்களாக தருமபுரி யின் கிராம பகுதிகளில், இந்த ஒற்றை யானை சுற்றி வருவதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தற்போது, வெயில் வாட்டி வருவதால், வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் வருவதாக, வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவு றுத்தியுள்ளனர்.