திருப்பூர், அக்.16 - பல்லடம் ஒன்றியம் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி முத்து நகரில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்க ரூ.14 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை ஞாயிறன்று காலை முத்து நகரில் நடைபெற்றது. இந்நிகழ் வில் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சின்னப்பன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சின்னப்பன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் கொங்கு சி.ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றிய செயலாளர் ஆர். பரமசிவம், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம் உள்ளிட்ட ஏராளமா னோர் பங்கேற்றனர்.