districts

img

காலை உணவு திட்டம் குறித்த அருவருக்கத்தக்க தலைப்பு

ஈரோடு, ஆக.31- பள்ளி மாணவர்களின் காலை உணவு திட்டம் குறித்து, அருவருக்கத்தக்க வகையில் தலைப்பிட்டு செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும் எதிர்வினையாற்றி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஆரம்பப்  பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் அரசுப்பள்ளி மாணவர்கள் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பெரும் பயணடைந்துள்ளனர். இது அனைத்து தரப்பினராலும் பெரும் வர வேற்பைப்பெற்றுள்ளது. இத்திட்டத்தால், தமிழகம் முழுவதும் உள்ள 32 ஆயிரம் பள்ளி களை சேர்ந்த 17 லட்சம் மாணவர்கள் பயன டைகிறார்கள். இந்நிலையில், வியாழனன்று வெளிவந்த தின மலர் நாளிதழில், சிற்றுண்டி திட்டம் குறித்து  அருவருக்கத்தக்க வகையில் தலைப்பிட் டுள்ளது. தினமலரின் இத்தகைய செய்தி தமிழகம் தனது ஒட்டுமொத்த எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளது. ஏழைக்குழந்தைகள் வயிறு நிறைந்த பின் மனநிறைவோடு கல்வி  கற்கும் திட்டத்தின் முக்கியத்துவம் தெரியாமல் தினமலர் தனது நடுநிலை நாற்றத்தை வெளிப் படுத்தியுள்ளதாக, அரசியலாளர்கள், சமூக செயற்பாட்டாகள் என அனைவரும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.  இதன்தொடர்ச்சியாக ஈரோடு மாமன்ற கூட்டத்தில் தினமலர் நாளிதழை கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டம் வியாழ னன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், குப்பை  வரி குறித்து விரிவாக பொருள் வைக்கப்படும்  போது, இதுகுறித்து ஏன் விரிவாக பொருள்  முன்வைக்கப்படவில்லை மாமன்ற உறுப்பினர் கள் எனக்கேள்வி எழுப்பினர். இவ்வாறு ஆட்சே பணை தெரிவிக்கப்பட்டாலும், தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் அண்மையில் பள்ளி மாண வர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங் கப்பட்டு,  மிகுந்த வரவேற்பையும், பாராட்டு களையும் பெற்றுள்ளது. இதனை ஏளனம் செய்து  ஈரோடு, சேலம் பதிப்பில் தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், மார்க் சிஸ்ட் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித் துள்ளனர். இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி  மாமன்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்களால் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென முன்மொழியப்பட்டது. ஏகமனதாக பலரும் மேசையைத் தட்டி ஆதரவைத் தெரிவித்தனர்.

நாமக்கல்

சிற்றுண்டி திட்டத்தை சிறுமைப்படுத்திய தினமலர் நாளிதழை கண்டித்து, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுகவினர், திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே தினமலர் நாளிதழை எரிக்கும் போராட் டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய துணைச் செய லாளர் ராஜவேல், மாநில மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர் ரியா உள்ளிட்ட திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.  

உடுமலை

அரசுத் தொடக்கப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தை கொச்சைப்படுத்தி கேவ லமாக எழுதிய தினமலர் நாளிதழையை கண்டித்து உடுமலை தாலுகா குரல்குட்டை  பகுதியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளி மாணவர்கள்  பள்ளிமுடிந்தவுடன் தங்களுடைய பெற்றோர்களுடன் பள்ளியில்  இருந்து ஊர்வலமாக வந்து குரல்குட்டை பேருந்து நிலையம் முன்பு கண்டன முழக்க மிட்டனர். மேலும்  தினமலர் பத்திரிகையின் மீது  தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தினர். முன்னதாக மாணவர்கள், தினமலர் நாளிதழ் நகலை கிழித்தெறிந்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

கோவை 
சிஐடியு, திமுக போராட்டம்

இதேபோல், சிற்றுண்டி திட்டத்தை கொச் சைப்படுத்தும் விதமாக செய்தி வெளியிட்ட  தினமலர் நாளிதழை கண்டித்து மேட்டுப்பாளை யத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் மற்றும்  திமுக கட்சியின் சார்பில் தனித்தனியே  ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம்  நடூர் பகுதியில் உள்ள துவக்கப்பள்ளியில் திமுக தெற்கு நகரச் செயலாளர் முனுசாமி தலைமை ஏற்றார். இதேபோல், வடக்கு நகரச் செயலாளர் முகமது யூனிஸ் தலைமையில் வள்ளுவர் பள்ளி முன்பு தினமலர் நாளிதழை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். சிஐடியு சார்பில் மேட்டுப்பாளையம் அண்ணா மார்க்கெட் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு தினமலர் நாளிதலுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர். தினமலர்  நாளிதழ், உடனடியாக தமிழக மக்களிடம் தின மலர்  நிர்வாகம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க  வேண்டும் என இந்த ஆர்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. கோவை அரசு கலைக்கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம், மாதர் சங்கம், வாலிபர்  சங்கம் ஆகிய அமைப்புகள் தினமலர் நாளிதழை  கண்டித்தும், எரித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். இதில், மாணவர் சங்கத்தின் மாவட்டத்  தலைவர் ரமேஷ் கண்ணன், செயலாளர்  அசாருதீன், மாதர் சங்கத்தின் மாவட்டத்  தலைவர் ஜோதிமணி, செயலாளர் சுதா, வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் தினேஷ்  ராஜா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.  சேலம் இதேபோன்று சேலம் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு, காலை உணவு திட்டத்தை  கொச்சைப்படுத்தும் விதத்தில் செய்தி வெளி யீடு செய்த தினமலர் நாளிதழை கிழித்தெ றிந்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதில் மாணவர் சங்க  மாவட்டத் தலைவர் அருண்குமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண் டனர். திராவிடர் விடுதலைக் கழகத்தினர் சேலம்  தினமலர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த தினமலர் பேனருக்கு கருப்பு மை அடித்தும், நாளிதழுக்கு தீ வைத்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதேபோல் திமுக மாநக ராட்சி கவுன்சிலர் ஏ.எம்.எஸ்.ராஜ்குமார், தருண்  ஆகியோர் தலைமையில் தினமலர் நாளிதழ் களை கிழித்தெறிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட் டனர்.