கோவை, பிப்.21- உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வேளாண்மை துறை சார்பாக விவசாயிகளுக்கு வழங்கக் கூடிய அரசு திட்டங்கள் குறித்து தெருகூத்து மூலம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோவை மாவட்டம், ஆனைமலை வட்டாரத்தில் புதனன்று நடைபெற்ற, உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வேளாண்மை துறை சார்பாக விவசாயிகளுக்கு வழங் கக்கூடிய அரசு திட்டங்கள் குறித்த தெருக்கூத்து விழிப் புணர்வை மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் பாடி துவங்கி வைத்தார். உடன் மாவட்ட துணை ஆட்சியர், அனைத்து துறை அலுவலர் மற்றும் விவசாயிகள் இருந்தனர். இந்நிகழ்வில், விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு, பயிர் சார்ந்த சாகுபடி குறித்த விழிப்புணர்வு, பயிர் வகை விதைகள், இடுபொ ருள், உரங்கள், இயற்கை உரங்களை பயன்படுத்து வது எப்படி? அதன் மூலம் விவசாயிகள் எவ்வாறு பயன் பெறுகிறார்கள் என்பது குறித்த விழிப்புணர்வு என தெரு கூத்து மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.