districts

img

தொழுநோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல், பிப்.6- அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி சார்பாக தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறையின் சார்பில், தேசிய தொழுநோய் ஒழிப்பு திட் டத்தின் ஒரு பகுதியாக உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல் லூரி முதல்வர் இராஜா தலைமை வகித்து, தொழுநோய்  விழிப்புணர்வு துண்டு பிரசு ரங்கள் மாணவ மாணவியர்களுக்கு விநியோ கித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் மோகனூர் வட்டார மருத்துவனை மேற் பார்வையாளர் வேல்முருகன் கலந்து கொண்டு பேசுகையில், தொழுநோய் பற்றி யும் சந்தேகத்திற்கு உண்டான அறிகுறிகள் பற்றியும், அறிகுறிகள் ஏதேனும் தென்பட் டால் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற் றும் நகர் நல மையங்களில் சிகிச்சை எடுத்து குணமாக்கி விடலாம், என்றார். இந்நிகழ்ச்சி யில் தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழியினை விலங்கியல் துறை மாணவ மாணவியர்கள், விலங்கியல் துறை தலை வர் ராஜசேகர பாண்டியன் மற்றும் தாவரவி யல் துறை உதவிப் பேராசிரியர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.