திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம் கணியாம்பூண்டி ஸ்ரீ செந்தூர் வித்யாலயா சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளியில் செவ்வாயன்று 44 ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எம்.எம்.ராஜகோபால், பள்ளியின் தாளாளர் முருகசுவாமி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.