சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்வு
அவிநாசி, நவ.26- அவிநாசி அருகே நடுவச்சேரி ஊராட்சி சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை சமூக சமத்துவம் மற்றும் மேம்பாடு அமைப்பின் மூலமாக நடத்தப்பட்டது. சமூக சமத்துவம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் தமிழ்நாடு பெண்கள் கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து, நடுவச்சேரி ஊராட்சியில் சைபர் கிரைம் குற்றங்களும் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகளும் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடுவச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் வரதராஜன், அவிநாசி ஊராட்சி ஒன்றிய வட்டார ஒருங்கி ணைப்பாளர் அருணாச்சலம், வழக்கறிஞர் மஹாலக்ஷ்மி, அவிநாசி காவல் நிலைய காவலர் அன்பரசு , சிடோ இயக்குநர் பாண்டிச்செல்வி, ஊராட்சி செயலாளர் மணிகண்டன் ஆகி யோர் பங்கேற்றனர். இதில் ஆன்லைன் மூலம் எவ்வாரெல்லாம் நமது பணத்தை மோசடி செய்கிறார்கள் என்றும், அவ்வாறு மோசடிகள் தொடர்பான புகாரை பதிவு இலவச உதவி எண் 1930 குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார். மேலும் வழக்கறிஞர் மஹாலக்ஷ்மி, பெண்கள் மீதான வன்முறைகள் எவ்வாறு நடைபெறுகிறது என்றும், பெண் களுக்கான உதவி எண் 181 குறித்தும், விழிப்புணர்வு வழங் கினார். இந்த நிகழ்வில் இறுதியாக சமூக சமத்துவம் மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இயக்குனர் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது. மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகை யில் மரக்கன்று நடப்பட்டது
உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்:51.18/60அடி
நீர்வரத்து:143கன அடி
வெளியேற்றம்:786கன அடி
அமராவதி அணை
நீர்மட்டம்: 89.51/90அடி.
நீர்வரத்து:556கனஅடி
வெளியேற்றம்:408கன அடி
சிறுமி பாலியல் வன்கொடுமை போக்சோவில் ஒருவர் கைது
உதகை, நவ.26- சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த தலைக்குந்தா பகுதியில் கூலித்தொழிலாளியின் மகள் தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமியின் மூத்த சகோதரரின் நண்பரான காந்திநகர் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என் பவர் கூலி தொழிலாளி வீட்டுக்கு அடிக்கடி வந்து சென் றுள்ளார். அப்போது அந்த 4-ம் வகுப்பு சிறுமியுடன் பேசி பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சிறுமிக்கு இனிப்பு வாங்கி தந்து, ஏமாற்றி அவரை அருகில் உள்ள சோலை பகுதிக்கு அழைத்து சென்று அங்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை யாரி டமாவது வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இந்த நிலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தால் பயந்து போன சிறுமி இது குறித்து தனது பெற்றோ ரிடம் கூறியுள்ளார். இதையடுத்து புதுமந்து காவல்நிலை யத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதன்பேரில் புதுமந்து காவல் ஆய்வாளர் அல்லிராணி, இளம் ஆய்வாளர் செந்தில் ஆகியோர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி அஜித்குமாரை கைது செய் தனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 506 (1)- கொலை மிரட்டல், 376 (ஏ),(பி)- (வன்புணர்ச்சி), மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து அஜித்குமாரை மகிளா நீதிமன்ற நீதிபதி நாராயணன் முன் ஆஜர்ப்படுத்தி ஊட்டி சிறையில் அடைத் தனர்.
குட்கா கடத்தல் - 3 பேர் கைது
கோவை, நவ. 26- கோவையில் குட்கா கடத்தலில் ஈடுபட்ட 3 இளை ஞர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 350 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். கோவையில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் களை புழக்கத்தை தடுக்க காவல்துறையினர் தீவிர நடவ டிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இதனையொட்டி, மாநகர மற்றும் மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் தணிக்கை மற்றும் சோதனையை தீவிரப் படுத்தி உள் ளனர். இந்நிலையில், காட்டூர் காவல் நிலைய போலீசார் சோம சுந்தரம் மில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந் தனர். அப்போது அவ்ழியே வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை இட்டனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் முட்டை முட்டையாக இருந்தது தெரிய வந்தது. சுமார் 350 கிலோ குட்கா மற்றும் ஒரு காரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். குட்கா கடத் தலில் ஈடுபட்ட சுஜாராம், கோவிந் மீனா ஆகிய 2 வட மாநில இளைஞர்கள் மற்றும் செந்தில்வேல் என்கிற சூரியா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.