குரங்கு அம்மை பரவலை தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் தமிழக சுகாதாரத்துறையின் மூலம் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்தொடர்ச் சியாக கோவை சர்வதேச விமான நிலையத்தில் திங்களன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் விழிப்புணர்வு மற்றும் முன் னேற்பாட்டு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.