districts

img

பெண் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணி

சேலம், டிச.22- ஆத்தூர் அருகே பெண் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடை பெற்ற இருசக்கர வாகனப் பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள அம்மாபா ளையத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் சார்பில், போதைப்பொருள் தடுப்பு மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. இதனை ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மலர்கொடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக செல்லியம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட பெண் கள் கலந்து கொண்டு இருசக்கர வாகனப் பேரணியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பதா கைகளை ஏந்திய படி பேரணியாக சென்றனர். செல்லி யம்பாளையத்தில் தொடங்கிய பேரணி நரசிங்கபுரம், விநாயகபுரம், உடையார்பாளையம், பேருந்து நிலையம், காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதியில் வழியாக சென்று அம்மம்பாளையத்தில் நிறைவு பெற்றது.