districts

img

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி விழிப்புணர்வு வாகனங்கள் துவக்கி வைப்பு

கோவை, ஜன.8- கேலோ இந்தியா விளை யாட்டு போட்டிகள் நடை பெற உள்ளதை முன்னிட்டு  விழிப்புணர்வு வாகனங் களை மாவட்ட ஆட்சியர் மற்றும் பொள்ளாச்சி நாடா ளுமன்ற உறுப்பினர் ஆகி யோர் துவக்கி வைத்தனர். கேலோ இந்தியா விளை யாட்டு போட்டிகள் வருகின்ற 19ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தமிழ் ழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இதுகுறித்து, பொது மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் அரசு  பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக் களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் இரண்டு விழிப்புணர்வு வாகனங் கள் துவக்கி வைக்கப்பட்டது.கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி யர் கிராந்திகுமார்  பாடி, பொள்ளாச்சி நாடா ளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் ஆகி யோர் வாகனத்தை பார்வையிட்டு, கொடி அசைத்து துவக்கி வைத்தனர். முன்னதாக மாவட்ட ஆட்சியருக்கு தனி யார் பள்ளி இசைக்குழு மாணவர்கள் இசை மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் கோவை மாவட்ட விளையாட்டு அலுவ லர்கள், விளையாட்டு அணி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் வீரமங்கை வேடமிட்ட இருவர், அனைவரையும் உற்சாகப்படுத்தினர். விழிப்புணர்வு வாகனங்கள் இரண்டும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத் தும் எனவும் அதனை தொடர்ந்து பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் எனவும் அதிகாரிகள் தெரி வித்தனர்.