ஈரோடு, நவ.24- புன்செய் புளியம்பட்டியில், பல துறை களில் சாதனை படைத்த மாணவர்களுக்கு அப்துல் கலாம் விருதை நடிகர் தாமு வழங் கினார். ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி விடியல் சமூக நல அறக்கட்டளை, ஸ்ரீதேனு சாரீஸ் அண்ட் சில்க்ஸ், அம்மா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி சார்பில் கல்வி, விளையாட்டு, அறிவியல் மற்றும் தனி திறமைகளில் சாதனை படைத்த மாணவ, மாணவியர் களுக்கு அப்துல் கலாம் இளம் சாதனை யாளர் விருது வழங்கப்பட்டது. புஞ்சைப் புளியம்பட்டி கே.ஜி. மஹாலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் நகர் மன்ற தலைவர் பி.எஸ்.அன்பு தலைமை தாங் கினார். அம்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் ராணி லட்சுமி அன்பு முன்னிலை வகித்தார். விழாவில் திரைப்பட நடிகர் தாமு சிறப்பு விருந்தினராக பங்கு கொண்டு சாதனை மாணவர்களுக்கு அப்துல் கலாம் இளம் சாதனையாளர் விருது வழங்கி வாழ்த் தினார். இந்நிகழ்ச்சியில் புன்செய் புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி களில் பயின்ற 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் அப்துல் கலாம் இளம் சாத னையாளர் விருதுகளை பெற்றனர்.