ஈரோடு, மே 2- பவானி வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று காத் திருக்கும் போராட்டம் நடை பெற்றது. மாதாந்திர உதவித்தொகை, குடும்ப அட்டை, வீட்டுமனை, 100 நாள் வேலை மற்றும் முழுமையான கூலி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா தலைவர் என்.சின்னுச்சாமி தலை மையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதில், அகில இந்திய செயல் தலைவர் எஸ்.நம்புராஜன், மாவட்ட தலைவர் டி.சாவித்திரி, செயலாளர் ஏ.சகாதேவன், பொருளாளர் வி.ராஜு, உதவித்தலைவர் ப. மாரிமுத்து, பவானி தாலுகா செயலாளர் கே.எஸ்.லீலாவதி, பொருளாளர் மனோ கரன், தீஒமு மாவட்ட தலைவர் பி.பி.பழனி சாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகளின் போராட் டத்தையடுத்து, பவானி வட்டாட்சியர் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னார். இதில், மனு செய்து உதவித்தொகை கிடைக்காமல் காத்திருப்போருக்கு விரை வாக பணப்பலன்கள் கிடைக்கச் செய்வது. ஏற்கனவே வந்து கொண்டிருந்த உதவித் தொகை நிறுத்தப்பட்டோருக்கு மீண்டும் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுப்பது. வங்கியில் ஏடிஎம் கார்டு கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்போம் என்கிற உறுதியை அளித்தனர். மேலும், 100 நாள் வேலையில் 4 மணி நேர வேலை, தனி அட்டை, தனி கணக்கு, வீட்டுமனை பட்டா, மாற்றுத்திற னாளிகளின் வாகனத்திற்கு ஓட்டுநர் உரிமம் போன்ற கோரிக்கைகளுக்கு துறை சார்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் வரும் மே 10 ஆம் தேதியன்று அழைத்துப் பேசி தீர்வு காண்பது எனவும் உறுதி அளிக்கப்பட்டதால் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.