திருப்பூர், டிச.25- பொங்கலூர் ஒன்றியம் அவினாசிபா ளையம் சுங்கச்சாவடியை ஜனவரி 1 ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தபோவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கத்தினர் தெரிவித்துள்ள னர். பல்லடம் அருகேயுள்ள பொங்க லூர் ஒன்றியம், வேலம்பட்டியில் நீர் நிலையை ஆக்கிரமித்து சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சுங்கச்சா வடியை அகற்ற உத்தரவுப் பிறப்பித்தும் அகற்றப்படாமல் உள்ளது. மேலும், ஜன வரி 1 ஆம் தேதி முதல் சுங்கச்சாவடி யில் வசூல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம், சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கம் ஆகி யவை சார்பில் அவிநாசிபாளையத்தில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கி ழமை நடைபெற்றது. இதில், ஜனவரி 1 ஆம் தேதி சுங்கச்சாவடியை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக்கூட் டத்தில், 150-க்கும் மேற்பட்டோர் கலந் துகொண்டனர்.