districts

ஆட்சியர் வீடு எதிரில் குழி: விபத்து ஏற்படும் அபாயம்

திருப்பூர், மார்ச் 8-  அவிநாசி முக்கிய சாலை எஸ்ஏபி பேருந்து நிறுத்தம் அருகில் சாலையில் குழி உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.  இதுகுறித்து வாகன ஓட்டிகள் சிலர் தெரிவிக்கையில், தினசரி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வரும் முக்கிய சாலை. இந்த சாலையில் குழி உள்ளது நெடுஞ்சாலைத் துறைக்குத் தெரியாதா? மாவட்ட ஆட்சியர் முகாம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களும் இங்கு உள்ளது. தினசரி அதிகாரிகள் இச்சாலை வழியாக தான் சென்று வருகின்றனர். இந்த குழியால் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் அடிக்கடி கீழே விழுகின்றனர். கடந்த வாரம், கூட பெண் ஒருவர் கிழே விழுந்துவிட்டர். நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.