districts

img

யோகா போட்டியில் அவிநாசி சிறுவர்கள் சாதனை

அவிநாசி, ஜூன் 7 - தேசிய அளவிலான யோகா போட்டி யில் அவிநாசி பகுதியைச் சேர்ந்த சிறு வர்கள் தங்கம், வெள்ளி பதக்கம் பெற்று  சாதனை படைத்துள்ளனர். தேசிய அளவிலான யோகாசனப் போட்டி அண்மையில் ஜம்மு காஷ்மீரில்  நடைபெற்றது. இதில் கர்நாடகா, ஆந் திரா, உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தர காண்ட் உட்பட பல்வேறு மாநிலங் களை சேர்ந்தோர் பங்கேற்றனர். தமிழ கம் சார்பில் பங்கேற்ற அவிநாசி தபஸ்  யோகாலயா மாணவர்கள் தக்ஷனா, பவிஷ்னா, ராமகிருஷ்ணா ஆகியோர் தங்க பதக்கமும், ஷியாம் வெள்ளி பதக் கமும், சபரீஷ் வெண்கல பதக்கமும் பெற்று சாதனை படைத்தனர்.  இதேபோல பயிற்சியாளர் யோகா சத்யா, ரகுபாலன் ஆகியோருக்கு சிறந்த பயிற்சியாளர், தமிழக யோகா பயிற்சியாளருக்கான பாராட்டு சான்றித ழும் வழங்கப்பட்டது. தேசிய அளவி லான யோகா போட்டியில் வென்ற மாண வர்கள் காட்மாண்டில் நடைபெற வுள்ள சர்வதேச அளவிலான யோகா சனப் போட்டியில் பங்கேற்கவுள்ளனர். மேலும் போட்டியில் வென்ற மாணவர் கள், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜிடம் வாழ்த்து பெற்றனர்.