districts

img

அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள்: 97 சதவிகிதம் நிறைவு

அமைச்சர் சு.முத்துசாமி தகவல் ஈரோடு, ஜன.18- அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் 97.21 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார். அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணி களை புதனன்று பார்வையிட்ட அமைச்சர், செய்தியாளர்களிடம் கூறுகையில்,  அத்திக் கடவு - அவிநாசி திட்டமானது கோவை, திருப் பூர் மற்றும் ஈரோடுமாவட்டங்களில் வறட்சி யால் பாதிக்கப்பட்ட சுமார் 24,468 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில் அமைக்கப்படு கிறது. பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து உபரி நீரை குழாய் மூலம் 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம் குட்டைகள் என 1045 நீர் நிலை களை நிரப்பும் வகையில் இத்திட்டம் வடிவ மைக்கப்பட்டுள்ளது. தற்போது 97.21 சதவிகித பணிகள் முடிக் கப்பட்டுள்ளது. பவானி ஆற்றின் குறுக்கே  தடுப்பணை மற்றும் ஆறு நீர் உந்து நிலை யங்களான பவானி, நல்லக்கவுண்டன் பாளையம், திருவாச்சி, போலநாயக்கன் பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் கட்டு மானப் பணிகள் முடிவடைந்துள்ளது. குழாய்கள் பதிக்கும் பணிகள் துரிதமாக  நடைபெற்று வருகிறது. மின்மாற்றிகள், ஏவு பம்புகள், மின்மோட்டார்கள், சுவிட்ச்கியர் மற் றும் பேனல் போர்டு ஆகியவை அனைத்து  நீர்உந்து நிலையங்களிலும் பொருத்தப்பட் டுள்ளது. மின்கம்பங்கள் அமைக்கும் பணி மற்றும் பூமிக்கடியில் மின்சார தொடரமைப்பு கள் பதிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகின்றது.  வடகிழக்கு பருவமழை காரணமாக திட் டப்பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட் டது. இதுவரை ரூ.1605.89 கோடி செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணிகள் முடிக்கப் பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு பிப்ர வரி மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந் தவுடன் தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்படும் அமைச்சர் சு.முத்துசாமி தெரி வித்தார்.