அவிநாசி, பிப்.19- நகர்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி, அவிநாசி பேரூராட்சி, திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதிகளில் விறுவிறுப்பாக வாக் குப்பதிவு நடைபெற்றது. அவிநாசி பேரூராட்சியில் உள்ள 18 வார் டுகளில் 11, 070 ஆண் வாக்களர்கள், 11,905 பெண் வாக்களர்கள் என மொத்தம் 22,975 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு 29 வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப்ப திவு நடைபெற்றது. திருமுருகன்பூண்டி நக ராட்சியில் உள்ள 27 வார்டுகளில் 13,725 ஆண் வாக்காளர்கள், 13,805 பெண் வாக்காளர் கள், ஒரு மாற்று பாலினத்தவர் என மொத்தம் 27,531 வாக்காளர்கள் உள்ளனர். இவர்க ளுக்கு 35 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணி முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று அமைதியான முறையில் வாக்களித்தனர். குறிப்பாக பதற் றமான வாக்குச் சாவடிகள் உள்பட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணி யில் ஈடுபட்டிருந்தனர். மேலும், நகர்ப்புற தேர்தலை ஒட்டி தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், தினசரி மார்க்கெட்கள், திரை யரங்குகள் உள்ளிட்டவைகளுக்கு விடு முறை வழங்கப்பட்டதால் தொழிலாளர்கள் எளிதாகவும், ஆர்வத்துடன் வந்து வாக்க ளித்தனர்.