உடுமலை, ஏப்.1- உடுமலை ரயில் நிலையத்தை நவீ னப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடை மேடை சீட்டுகள் மற்றும் பயணச்சீட்டு பெற தானியங்கி இயந்திரம் பயன்பாட் டுக்கு வந்ததுள்ளது. உடுமலை ரயில் நிலையத்தில் பய ணிகள் பயணச்சீட்டு பெற நீண்ட வரிசையில் காத்து நிற்க வேண்டியிருந் தது. பயணச்சீட்டு மற்றும் நடைமேடை சீட்டுகளை பெற காலதாமதம் ஏற் பட்டு வருவதை பயணிகள் பலமுறை உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத் தினர். உடுமலை ரயில் பயணிகள் குழு ரயில் நிலையத்தை நவீனப்படுத்த பாராளுமன்ற உறுப்பினர்களையும், ரயில்வே துறையின் உயர் அதிகாரிக ளிடமும் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து, ஏப்.1 ஆம் தேதி முதல் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம் நடைமுறைக்கு வந்ததுள்ளது.