districts

img

ஆட்டோ நிறுத்தத்தை காலி செய்ய வற்புறுத்தல் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் வெற்றி

தாராபுரம், மார்ர்ச் 27– தாராபுரத்தில் ஆட்டோ ஸ்டேண்டை காலி செய்ய வற்புறுத் துவதாக கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் 2 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. தாராபுரம் பேருந்து நிலையம் முன்பு பல ஆண்டுகளாக ஆட்டோ ஸ்டேண்ட் செயல்பட்டு வருகிறது.  இந்த ஆட்டோ ஸ்டேண்டில் 70க்கும்  மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப் பட்டு வருகிறது. பேருந்து நிலை யத்தில் இருந்து வரும் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற் றும் சரக்குகளை நகரப்பகுதிக்கு கொண்டு செல்லவும், அதேபோல் ஏற்றி வருவதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இந் நிலையில் வியாழன்று திமுகவை சேர்ந்த 21ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் மற்றும் நகராட்சி துணை தலைவர் ரவி ஆகியோர் ஆட்டோ ஸ்டேண்டை காலி செய்ய வேண் டும் என கூறியதாக தெரிகிறது.  இதற்கு கடும் எதிர்ப்பு தெரி வித்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோ ஸ்டேண்டை காலி செய்யமுடியாது எனக் கூறியுள்ளனர். இதையடுத்து நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அதிகாரிகள் மூலம் ஆட்டோ ஸ்டேண்டை காலி செய்யுமாறு நோட்டீஸ் கொடுத்தாகவும் கூறப் படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரி வித்து பேருந்துநிலைய ஆட்டோ  ஓட்டுநர்கள் மற்றும் நகர்ப்பகுதி யில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் வெள்ளியன்று முதல் தொடர்ந்து பேருந்து நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த னர். ஆட்டோக்கள் ஓடாததால் பேருந்து நிலையத்தில் இருந்து  வரும் பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாதிப்படைந்தனர். இந்நிலை யில் நகராட்சி அதிகாரிகள் ஆட்டோ  ஸ்டேண்ட் தொடர்ந்து இயங்கலாம் என ஆட்டோ ஓட்டுநர்களிடம் உறுதி யளித்ததை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.