உடுமலை பகுதியில் குடிநீர் பிரச்சனை யால் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதையும், இந்த போராட்டங்களை அரசு முறையாக கவனம் செலுத்த வில்லை என்றால் சட்டம் ஒழுங்கு பிரச்ச னையாக மாறக்கூடிய சூழ்நிலை இருப் பது பற்றி கடந்த 11 ஆம் தேதி தீக்கதிர் செய்தி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத் தக்கது.
உடுமலை, மார்ச் 14 - உடுமலை கிராம பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் முறையாக கிடைப்ப தில்லை என்று தொடர் போராட்டங்கள் நடை பெற்று வருகிறது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாகாமல் தடுக்கவும், பொது மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கவும் 14 ஆம் தேதி உடுமலை வட்டாட்சியர் அலுவகத் தில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. திருமூர்த்தி அணையில் இருந்து பூலாங்கி ணறு கூட்டு குடிநீர் திட்டம் என்ற பெயரில், உடு மலையின் மேற்கு பகுதியான தளி பேரூ ராட்சி, சின்ன வாளவாடி, பெரிய வாளவாடி, ராகல்பாவி, கிருஷ்ணாபுரம், முக்கோணம் மற்றும் பூலாங்கிணறு பகுதிகளுக்கு கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் முறையாக பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப் பட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக இப்பகுதிகளுக்கு குடிநீர் கிடைக்காமல் மக் கள் தங்கள் வசிப்பிட பகுதிகளில் போராட்டங் களை நடத்தி வந்தனர். அப்பொழுது அதிகா ரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி இப்போ ராட்டங்கள் முடிவுக்கு வரும் நிலையில் இருந் தது.
ஆனால் கடந்த 7ஆம் தேதி குடிநீர் கேட்டு பூலாங்கிணறு ஊராட்சி முக்கோணம் பகுதி மக்கள் உடுமலை பொள்ளச்சி தேசிய நெடுச்சாலையில் சாலை மறியில் போராட் டம் நடத்தினர். இதனால் தேசிய நெடுச் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து குடிநீர் பிரச்சனை தீர்வுக்கு வரும் என்று உறுதி அளித்தனர். இதை யடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது. எனினும் உறுதியளித்தபடி குடிநீர் வழங் காத நிலையில், கடந்த 13 ஆம் தேதி திங்களன்று மாலை தேசிய நெடுஞ்சாலை யில் அதிக எண்ணிக்கையிலான பொது மக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்ட னர். தங்கள் பகுதிகளுக்கு குடிநீர் இன்று வரை வரவில்லை, குடிநீர் கிடைக்கும் வரை தேசிய நெடுச்சாலையில் மறியல் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்து நடத்திய இந்த மறியல் போராட்டத்தால் பல கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து முடங்கியது. பின்னர் வருவாய், ஊராட்சி மற்றும் காவல்துறை அதி காரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட் டம் முடிவுக்கு வரவில்லை. இதனால் காவல் துறையினர் போக்குவரத்து மாற்றம் செய்து சில வாகனங்களை அருகில் உள்ள கிராமங் கள் வழியாக அனுப்பிக் கொண்டு இருந்த னர்.
இதன்படி உடுமலையில் இருந்து வாள வாடி செல்ல ராகல்பாவி வழியாக அனுப்பிய எண் 19 என்ற பேருந்தின் பின் பக்க கண்ணாடி யின் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கிய தில் கண்ணாடி உடைந்தது. இதனால் யாருக் கும் காயம் ஏற்படவில்லை. இந்த சூழ்நிலையில், போராட்டத்தை முடி வுக்கு கொண்டுவரும் வகையில், இப்பகுதி ஊராட்சிமன்ற தலைவர்கள் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள், உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவர்த்தை நடத்துவ தாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைய டுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. பின்னர் உடுமலையில் வட்டாட்சியர் கண் ணாமணி தலைமையில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேன்மொழிவேல், வட் டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி விஜயலட்சுமி மற் றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கடுமையான வாக்குவா தம் ஏற்பட்டது. இதில் குடிநீர் பிரச்சணைக்கு அதிகாரிகளின் நடவடிக்கையே காரணம் என் றும், முறையாக செயல்பட்டு வரும் பூலாங்கி ணறு கூட்டுகுடிநீர் திட்டத்தை நிறுத்தாமல் செயல்படுத்த வேண்டும் என்று வலியு றுத்தப்பட்டது. இதற்கு குடிநீர் வாரிய அதிகா ரிகள் ஏற்கனவே பூலாங்கிணறு கூட்டுகுடிநீர் திட்டம் கலாவதியான நிலையில், தற்பொ ழுது 2017 ஆம் ஆண்டு முதல் புதிய திட்டம் அமல்படுத்தபட்டு, குடிநீர் குழய்கள் அமைக் கபட்டு உள்ளது. புதிய குடிநீர் திட்டத்தின் கீழ் இனி முறையாக குடிநீர் கிடைக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்றனர். -ந.நி