ஈரோடு, ஜன.4 - போக்குவரத்து தொழிற்சங்கத் தினரின் வேலை நிறுத்தப் போராட் டம் குறித்து, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டம் ஈரோட்டில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத் துக்கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான 15 ஆவது ஊதிய உயர்வை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலா ளர்களுக்கான அகவிலைப்படி உயர்த்த வேண்டும். வாரிசுதா ரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வூதிய பலன் களை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி வருகின்ற ஜன.9ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் அறி விக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில், வேலை நிறுத்தம் குறித்து பொதுமக்களுக்கு தெரியபடுத் தும் வகையில், பல்வேறு இடங் களில் துண்டு பிரசுரங்கள், ஆர்ப் பாட்டங்களை தொழிற்சங்க கூட்ட மைப்பினர் நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, கோபி செட்டிபாளையம் பேருந்து நிலை யம் முன்பு அனைத்து போக்குவ ரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட் டத்திற்கு, போக்குவரத்து தொழிற் சங்க கூட்டமைப்பு தலைவர் எம்.கே.நடராஜன் தலைமை வகித் தார். மேலும், சிஐடியு தலைவர் கருப்புசாமி, ஓய்வுபெற்ற நல அமைப்பு நிர்வாகி கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சரவணன் நன்றி கூறினார். இதேபோன்று, ஈரோடு மாவட் டம் சத்தியில் வேலை நிறுத்தம் குறித்த மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மண்டலத் தலைவர் கே.மாரப்பன் தலைமை வகித்தார். கிளை நிர்வாகிகள் மற்றும் திரளான போக்குவரத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கோவை
கோவை அரசு போக்குவரத்து கழக தலைமையகம் முன்பு நடை பெற்ற வேலை நிறுத்த விளக்கக் கூட்டத்தில், சிஐடியு மாநில சம்மே ளனத்தின் துணை பொதுச்செய லாளர் எம்.கனகராஜ், ஓய்வுபெற் றோர் அமைப்பின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சேதுராமன், ஒய்வு பெற்ற பணியாளர் அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் ராஜா ராம், அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்க கோவை கோட்ட பொதுச்செயலாளர் எம்.பரமசிவம் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில், திராளன போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அமைப்பினர் கலந்து கொண் டனர்.