districts

img

மாற்றுத்திறனாளி பெண்ணை கொலை செய்ய முயற்சி

தருமபுரி, ஜன.19- அரூர் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை கொலை செய்ய முயன் றவரை கைது செய்ய வேண்டும் என அனைத்துவகை மாற்றுத்திறனாளி கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூர் வட் டம், கொமாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சாக்கன் - ராஜம்மாள் தம் பதியினர். இவரது 4 ஆவது மகள் அற் புதம் (40). இவர் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி. திருமணமாகாத நிலையில், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், வெள்ளியன்று விடிற்காலை 3 மணிக்கு வீட்டின் வெளியே உள்ள கழிப்பறைக்கு சென்றுள்ளார். அப் போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அற்புதம் தலையின் மீது துணியை மூடி, தான் வைத்திருந்த கத்தியால் அற்புதத்தின் கழுத்தை அறுத்து, கொலை செய்ய முயன் றுள்ளார். அப்போது, அவர் கூச்சலி டவே அந்த நபர் அங்கிருந்து ஓடி விட்டார். இதையடுத்து அவரின் அல றல் சத்தம் கேட்டு வந்த அற்புதத்தின்  பெற்றோர், ரத்த வெள்ளத்தில் கிடந்த அற்புதத்தை மீட்டு, அரூர் அரசு மருத் துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கள் மேல் சிகிச்சைக்காக அற்பு தத்தை தருமபுரி அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையறிந்த தமிழ் நாடு அனைத்துவகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.மாரிமுத்து, பொரு ளாளர் தமிழ்செல்வி ஆகியோர் மருத் துவமனைக்கு நேரில் சென்று ஆறு தல் தெரிவித்தனர். மேலும், மாற்றுத் திறனாளி பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற நபரை கைது செய்ய வேண்டும் என  மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை வலியுறுத்தியுள்ளனர்.