districts

img

மாவட்ட ஆட்சியர் பெயரில் வாட்ஸ் ஆப் மோசடிக்கு முயற்சி

திருப்பூர், ஜூன் 9- திருப்பூர் மாவட்ட ஆட்சியர்  பெயரில் அவரது புகைப்படத் துடன் போலி வாட்ஸ் ஆப் கணக்கு  தொடங்கி அரசு அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மோசடி யில் ஈடுபட முயன்ற மர்ம நபர்கள்   குறித்து காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டுள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியராக எஸ்.வினீத் கடந்த ஓராண்டு கால மாகப் பணியாற்றி வருகிறார். இந் நிலையில் அவரது பெயரில், அவ ரது புகைப்படத்துடன் ஒரு வாட்ஸ்  ஆப் எண்ணில் இருந்து திருப்பூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு  குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள் ளது. அந்த குறுஞ்செய்தியில், எவ்வாறு இருக்கிறீர்கள்? வேலை எவ்வாறு செல்கிறது? என்று கேட் கப்பட்டுள்ளது.  இதற்கு அரசு அதிகாரி கள் சிலர் பதில் அனுப்பியுள்ளனர். இதன் பின்னர் வங்கி விவரம்  உள்ளிட்ட பணம் தொடர்பான விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த  அதிகாரிகள் இது குறித்து ஆட்சியர் எஸ்.வினீத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற னர். அப்போது அவரது பெயரில்,  அவரது புகைப்படத்தை பயன்ப டுத்தி வாட்ஸ்-அப் கணக்கு போலி யாக தொடங்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த மோசடி முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் காவல் பிரிவில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி, இந்த மோசடி யில் ஈடுபட்டவர்களைக் கண்டுபி டிக்க முயற்சி மேற்கொண்டுள்ள னர்.  தொடரும் மோசடி முயற்சி இதற்கு முன்பு திருப்பூர் மாவட்ட ஆட்சியராக விஜயகார்த் திகேயன் இருந்தார். அப்போது, அவரது பெயரில் போலியாக முக நூல் கணக்கு தொடங்கி சிலரி டம் பணம் கேட்கப்பட்டது. இது குறித்தும் காவல் துறையில் புகார்  தெரிவிக்கப்பட்டது. எனினும் மோசடி நபர்களைக் கண்டுபி டிக்க முடியவில்லை. இந்த பின்ன ணியில் மீண்டும் முயற்சி தொடங் கப்பட்டு உள்ளது கவனிக்கத் தக்கது. இந்த சம்பவம் குறித்து ஆட்சி யர் வினீத் கூறியதாவது: போலி யாக வாட்ஸ் ஆப் கணக்கு தொடங்கி, பலருக்கும் குறுஞ் செய்தி அனுப்பியுள்ளனர். இது குறித்து காவல் துறையில் புகார்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மேற்கொள்ளப் பட்ட முதல் கட்ட விசாரணையில், குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட அலைபேசி எண், ராஜஸ்தானில் உள்ள அலைபேசி கோபுரத்தின் தொடர்பில் இருப்பதாகக் காண் பித்துள்ளது.  காவல் துறையினர் தொடர் நட வடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் ஆட்சியர் பெயரில் இருந்தோ அல்லது புகைப்ப டத்தை பயன்படுத்தியோ ஏதாவது  எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்தால் காவல் துறையில் புகார்  தெரிவிக்கலாம் என்று கூறினார்.