சேலம், ஜூலை 23- வீட்டையும், கடையையும் பூட்டி கொலை மிரட்டல் விடுத்து வரும் கோயில் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கணவன், மனைவி தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை அடுத்த வேலை நத்தம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் குப்தா - லட்சுமி தம்பதியி னர், தங்களது நான்கரை வயது குழந்தையுடன் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அப்போது திடீரென மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதையறிந்த பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அங்கி ருந்து அழைத்து சென்றனர். இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் தினேஷ் குப்தாவிடம் விசாரணை மேற்கொண்ட னர்.
அப்போது அவர் கூறுகையில், எங்கள் பகுதியில் மாரியம் மன் கோவில் உள்ளது. அதன் அருகே கடந்த 90 ஆண்டுகால மாக எங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகிறோம். நாங் கள் வசிக்கும் நிலம் எங்கள் தாத்தா மற்றும் தந்தை பெயரில் அனைத்து அரசு ஆதாரங்களும் உள்ளது. இந்நிலையில், மாரி யம்மன் கோவில் நிர்வாகத்தை சேர்ந்த சிலர் இது கோவி லுக்கு சொந்தமான நிலம் என்று கூறி வருகின்றனர். மேலும், எங்களது கடைக்கும், வீட்டிற்கும் வாடகை கேட்டு கோயில் நிர்வாகி மாணிக்கம் என்பவரின் மகன் மாரியப் பன், அடியாட்களுடன் வந்து எங்களை மிரட்டி, முன்பணமாக ஒரு லட்ச ரூபாயும், கடையின் வாடகைக்கு 15 ஆயிரம் கொடுக்க சொல்லி தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்ற னர். மேலும், கொலை செய்து விடுவதாக மிரட்டி கடையை யும், வீட்டையும் பூட்டிவிட்டு எங்களை வெளியேற்றினர். இத னால் தற்போது வாழ வழியில்லாமல் நடுரோட்டில் தவித்து வருகிறோம். வேறு வழியில்லாததால் தற்கொலைக்கு முயன் றோம். கோவில் நிலம் எனக்கூறி கொலை மிரட்ட விடுத்த நபர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்ணீர் மல்க தெரிவித்தனர். பல ஆண்டுகாலமாக வாழ்ந்த வீட்டிலிருந்து வெளியேற்றி கொலை மிரட்டல் விடுத்த கோவில் நிர்வாகிகள் மீது நடவ டிக்கை எடுக்க கோரி கணவன், மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னதாக இந்த சம்பவம் நடைபெறுகையில் ஆட்சியர் அலுவலகத்தி னுள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல் வம், ஆர்.காந்தி ஆகியோர் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றி ருந்தது குறிப்பிடத்தக்கது.