சேலம், ஜூன் 13- அரியாக்கவுண்டம்பட்டியில் சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான ரூ 6 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் அபகரிக்க முயற்சியை தடுத்து நிறுத்தி நகருக்குள் வனம் திட்டத்தை செயல்படுத்த கோரி மாநக ராட்சி ஆணையாளரிடம் மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. சேலம் மாநகராட்சி 21ஆவது டிவிசனுக்கு உட்பட்ட அரியாக்கவுண்டம்பட்டி பகுதியில் 1988 ஆம் ஆண்டு 63 வீட்டு மனைகள் (சர்வே எண். 51/2A, 2B, 2C,10B, 10C,10F,10G) பிரிக் கப்பட்டது. இதில், 20,604 சதுர அடிகள் கொண்ட சிறுவர் பூங்கா விளையாட்டு மைதானம் ஒதுக்கீடு செய்து நகர் ஊர மைப்பு இணை இயக்குனர் சேலம், தருமபுரி மண்டல அலுவலகத்தில் 4-3-1988ம் தேதியில் ம.ப/ம (சேத)எண். 15/88ன் படி ஒப்புதல் பெற்று, வீட்டுமனை அங்கீகாரம் வாங்கி அனைத்து மனைகளும் விற்பனை செய் தனர். வீட்டுமனை வாங்கியவர்கள் கிரய பத்திரத்திலும் பூங்கா இடம் இதற்கு சம்பந்தப் பட்டது என பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 20,604 சதுரடிகள் கொண்ட நிலத்தினை போலியாக பத்திரம் தயா ரித்தும், பட்டா வாங்கியும் நீதிமன்றத்தில் உண்மை நிலையை மறைத்து உத்திரவு வாங்கி அதன் வாயிலாக பூங்கா இடம் தனக்கு சொந்தமானது என வேலி அமைக்க தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சி சேலம் மாநகராட்சி ஆணையருக்கு அளித்த மனு அளித்துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கூறுகையில், ரூ 6 கோடி மதிப் புள்ள அரசுக்கு சொந்தமான மாநகராட்சி பூங்கா நிலத்தை மீட்டு சிறுவர் பூங்கா, விளை யாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தி நோட்டீஸ் வெளியிட்டு பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி மாவட்ட ஆட்சியர், சேலம் மேற்கு சட்டமன்ற முன் னாள் உறுப்பினர் ஜி.வெங்கடாஜலம், மாநகராட்சி ஆனையாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை சந்தித்து மனு கொடுக்கப் பட்டது. மேற்படி பூங்கா நிலத்தில் நகருக்குள் வனம் என்ற திட்டத்தை அமைக்கவுள்ளதாக அப்பொழுது சேலம் மாநகராட்சி ஆணை யாளராக இருந்த கிருஸ்துராஜ் ஆணை வெளியிட்டார்.
அனைத்து பத்திரிகைகளும் செய்தியாக வெளி வந்தது. இந்நிலையில், செவ்வாயன்று, நபர்கள் நாங்கள் இந்த நிலத்தை விலைக்கு வாங்கியு ள்ளோம் என கூறி நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தில் மூள்வேலி அமைக்க கற்களை கொண்டு வந்து முயற்சி செய்துள்ளார்கள். அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததின் பேரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பி.பால கிருஷ்ணன் தலைமையில் அதிமுக, திமுக, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், ஊர் பொது மக்கள், விளையாட்டு வீரர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையீட்ட பின் மாநக ராட்சி அதிகாரிகள், காவல் துறையினர் சம்மந் தப்பட்ட நிலத்திற்கு நேரில் வந்து நிலம் அப கரிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர். பின்பு சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் பி.பாலகிருஷ்ணன் தலைமையில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தரை சந்தித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நகருக் குள் வனம் அமைக்கும் திட்டத்தை உடனடி யாக செயல்படுத்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை மனு கொடுக் கப்பட்டது என்றனர். இவ்வியக்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கிளை உறுப்பினர்கள் கே. கண்ணன், ஆர்.சசிக்குமார் அதிமுக இளை ஞர் அணி சூரமங்கலம் மண்டல செய லாளர் எஸ்.மணி, பாலாஜி நகர் குடியிருப் போர் சங்க கதிர் ஆகியோர் உடனிருந்தனர்.